எமது எல்லைகளில் சிக்கல்கள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Trouble at our borders

- எரந்தி டீ சில்வா

இலங்கையின் நீண்டகாலம் நிலவும் “பாரா தீர்வைகள்” முறையானது சாதாரண இலங்கையருக்கு மிகவும் தெரியாத ஒரு பிற்போக்குத்தனமான முறையாகும். ஒரு பாரா தீர்வையானது எங்கள் அனைத்து இறக்குமதிகளும் உட்பட்டதும், வழக்கமான சுங்க வரிக்கு மேல் அறவிடப்படும் ஒரு வகை தீர்வையைக் குறிக்கிறது. எங்கள் இறக்குமதியில் பெரும்பாலானவை வழக்கமான சுங்க வரியை மட்டுமல்லாது, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு, “செஸ்” (ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வரி) மற்றும் சேர்பெறுமதி வரி (VAT) ஆகியவற்றையும் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.

எங்கள் தற்போதைய தீர்வை முறையின் விளைவுகள்
இந்த வரிகள் குறிப்பிட்ட உள்ளூர் வணிகங்களைப் பாதுகாப்பதற்கும் இறக்குமதியைக் குறைப்பதற்கும் வருவாய் கவலைகள் மற்றும் பாதுகாப்புவாத நோக்கங்களிலிருந்து உருவாகின்றன. இருப்பினும், விரும்பத்தகாத யதார்த்தம் என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பமுடியாத அளவிற்கு விலை உயர்ந்ததாக ஆக்குகையில் சர்வதேச வர்த்தகத்தை அது தடுக்கிறது. சுங்க வரி ஏற்கனவே 30% ஆக இருந்தாலும், பாரா கட்டணங்கள் வந்தவுடன், பெரும்பாலான பொருட்களின் மொத்த வரி - உணவு முதல் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் வரை - 50% முதல் 100% வரை எங்கும் அதிகரிக்கலாம். இது நாம் நுகர விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நமது திறனைக் கடுமையாக கட்டுப்படுத்துவதுடன் அதிக விலை காரணமாக அடிப்படை பொருட்களைக் கூட அடையமுடியாத நிலைக்குப் பெரும்பாலான மக்களைத் தள்ளுகின்றது.

பாரா கட்டணத்தில் காணப்படும் மற்றொரு முதன்மைப் பிரச்சினை அது பொது மக்களுக்கு வெளிப்படையானதாக இல்லாமையாகும். இந்த வரிகளின் சிக்கலான தன்மை மற்றும் எங்கள் பொருட்களின் விலையில் அவற்றின் தாக்கம் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாது என்றாலும், தற்போதைய முறை எங்கள் தீர்வைகளை அணுகவும் புரிந்து கொள்ளவும் விரும்பும் சாதாரண குடிமக்களுக்கு விதிவிலக்காக கடினமானதாகவும் குழப்பமானதாகவும் ஆக்குகிறது, ஏனெனில் ஒரு பொருளுக்கான மொத்தத் தீர்வையைக் கணக்கிட பயன்படுத்தப்படும் தெளிவாக இல்லை.

மேலும், இந்த சிக்கலான முறையானது புரிந்துகொள்வதற்கும், கையாளுவதற்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருப்பதால், தங்கள் சொந்த வணிகங்களுக்காக அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக பொருட்கள் அல்லது காரணி உள்ளீடுகளை அனுப்ப முயற்சிக்கும் உள்ளூர்வாசிகள் தங்கள் ஏற்றுமதிக்கு எதிர்பார்க்காத பாரிய தீர்வைகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இது  இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகள் தேவைப்படும் உள்ளூர் வணிகங்களுக்கும் வளர்ச்சியைச் சாத்தியமற்றதாக்கி அவர்களின் செலவுகளை அதிகரிக்கின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் (ADB) மேற்கொள்ளப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஆய்வில் இது குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது, உள்ளூர் ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளை போட்டி விலையில் அணுகுவதற்கான போதிய அணுகல் இல்லாமையைத் தங்களது பிரதான சவால்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று தெரிவிக்கிறது.

இறக்குமதியைச் சார்ந்து இல்லாத உள்ளூர் உற்பத்தியாளர்களும் தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு போட்டி இல்லாததால் அவற்றின் விலைகளைக் குறைப்பதற்கும் ஊக்கத்தைக் கொண்டிருக்கவில்லை; இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் செயற்கையாக அதிக விலை என்பதால் அவர்கள் அதிக விலையிடலாம். இதன் பொருள் என்னவென்றால், எங்கள் உள்ளூர் தயாரிப்புகள் சர்வதேச அளவில் போட்டியற்றவையாக இருக்கின்றன, எங்கள் இறக்குமதிகள் தேவையின்றி விலை உயர்ந்தவை, அதே நேரத்தில் உற்பத்தியாளர்கள் தங்கள் இலாபங்களைப் பாதுகாக்க அரசாங்கத்தை அதிகளவில் நம்பியுள்ளனர். சுருக்கமாக, இந்த முறையானது எதிர்மறையானதாகும் - இது விலைகுறைவான இறக்குமதியையும் பல வணிகங்களின் உள்ளூர் வளர்ச்சியையும் தடுக்கிறது.

நேர்மறையான சீர்திருத்தத்திற்கான வழிகாட்டிகள்

இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி அரசாங்கம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அது நுகர்வோர் தெரிவு மற்றும் மலிவுத்தன்மையை அதிகரிப்பதோடு நமது உள்ளூர் வணிகங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். வர்த்தக தாராளமயமாக்கல் என்பது இந்த முடிவுகளை அடைவதற்கான மிகச் சிறந்த முறைகளில் ஒன்றாகும். எங்கள் குழப்பமான அமைப்பை ஒரு சீரான தீர்வை விகிதத்துடன் மாற்றுவது இந்த பயணத்தின் முதல் முக்கியமான படியாக இருக்கலாம்.

மேலே விவரிக்கப்பட்ட பிரச்சினைகளைப் பார்க்கும்போது, ​​அதிகப்படியான சிக்கலான பாரா தீர்வை முறையின் மீதான நமது தற்போதைய நம்பகத்தன்மை நாட்டின் பொருளாதார நலன்களுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகிறது. இது வேறுபட்ட அணுகுமுறைக்கான நேரமென ஓரளவிற்கு அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. தேசிய கொள்கைக் கட்டமைப்பில் அதன் பேரினப் பொருளாதார கொள்கை கட்டமைப்பின் கீழ் “உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்தல்” என்ற விடயம் அடங்கும். நாட்டிற்கு உண்மையான பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்கு தீர்வைச் சீர்திருத்தம் மிகவும் பரந்ததாக இருக்க வேண்டும், இது ஒரு அங்கமாகும்.

பாதுகாப்புவாதத்தின் நீண்ட வரலாற்றின் பின்னர் வர்த்தக தாராளமயமாக்கலுக்கான நகர்வுக்காக பெரும்பாலும் வெற்றிபெற்ற சிலி, இறக்குமதிகளுக்கு ஒரு மட்டமான தீர்வை வரியை அறிமுகப்படுத்திய பின்னர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்தது. எல்லைத் தீர்வைகளை எளிதாக்குவதற்கான இந்த சீர்திருத்தம் உள்ளூர் வளங்களை சிறப்பாக ஒதுக்க வழிவகுத்தது, ஏனெனில் இது குறிப்பிட்ட கைத்தொழில்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமையளித்து நடாத்தப்பட்டமையைத் தடுத்தது. எனவே, சந்தை மிகவும் போட்டித்தன்மையுடன் வளர்ந்ததுடன் உள்ளூர் வணிகங்கள் அவர்களுக்கு தேவையான இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளை அணுகுதல் எளிதாகியது. இது ஏற்றுமதித் துறையிலும் வளர்ச்சியை ஏற்படுத்த உதவியது, இதனால் 1990 முதல் 2003 வரையிலான மொத்த ஏற்றுமதியின் அளவு 8.1% ஆக உயர்ந்துள்ளது. ஆரம்ப மட்டமான தீர்வை வீதமானது ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தபோதிலும், தாராளமயமாக்கலை ஊக்குவிக்கும் போது அதேவேளை ஒரு சீரான வீதத்தை செயல்படுத்தியமை நேர்மறையான விளைவுகளைத் தூண்டியது. மட்டமான தீர்வை வீதம் 2003 ஆம் ஆண்டு வரை படிப்படியாகக் குறைக்கப்பட்டதுடன் சிலி இப்போது ஒரு சீரான கட்டணத்தை 6% இற்கும் குறைவாகக் கொண்டுள்ளது, மேலும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுடன் (FTA) சம்பந்தப்பட்ட  பல நாடுகளுக்கான தீர்வைகளை முற்றிலுமாக நீக்குகிறது.

இலங்கையின் விடயம் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், தீர்வைகளை எளிதாக்குவதும் ஒருங்கிணைப்பதும் குழப்பத்தைக் குறைக்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மேலும் சிறந்த வர்த்தகத்தின் வழியில் இடையூறாக நிற்கும் தாமதங்களை அகற்றும், இது பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளைத் தருகிறது என்பது தெளிவாகிறது. விரும்பிய முடிவு அவசியமில்லை என்றாலும், இலங்கை அதன் தீர்வைகளை ஒப்பீட்டளவில் உயர் மட்டத்தில் பராமரிக்க விரும்பினால், இன்னும் அரசாங்கம் பாரா கட்டண முறையை அகற்றி, அனைத்து உள்ளூர் கைத்தொழில்களுக்கும் ஒரே அளவிலான பாதுகாப்பை உள்ளடக்கிய ஒற்றை, சீரான வீதத்தை விதிக்க முடியும். 

குறைந்த பட்சம், முறைமையில் அதிக தெளிவைக் கொண்டுவருவதன் மூலமும், ஒரு உற்பத்திக்கான மொத்த தீர்வைப் பெறுமதி குறித்த தற்போதைய நிச்சயமற்ற தன்மையை நீக்குவதன் மூலமும் எல்லையில் மிகச் சிறந்த பரிமாற்றத்தை எளிதாக்கும். இந்தச் சீர்திருத்தம் மூலம் சிலியில் செய்ததைப் போல உள்ளூர் நிறுவனங்களுக்கான இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளுக்கான அணுகலை அதிகரிப்பதன் மூலம் நமது உள்ளூர் வணிகங்களையும் ஏற்றுமதித் துறையையும் மேம்படுத்த முடியும். எவ்வாறாயினும், நீண்ட காலமாக, வரி விகிதம் இன்னும் நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக இருந்தால், ஒரு சீரான தீர்வையானது ஒரு தலைப்பட்சமாக பெரிதும் மேம்படுத்தாது; இலங்கையும் ஒட்டுமொத்த கட்டண விகிதத்தை படிப்படியாகக் குறைக்க வேண்டும் அத்துடன் உண்மையிலேயே புரிந்துகொள்ளக்கூடிய வகையில் புரிந்துகொள்ளக்கூடிய தீர்வை முறையின் நன்மைகளுக்காக வர்த்தகத்தை எளிதாக்க பிற உத்திகளில் ஈடுபட வேண்டும்.

அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், இது மிகவும் செயல்பாட்டு மற்றும் பயனுள்ள தீர்வை முறையை நோக்கிய ஒரு நேர்மறையான பாதையின் தொடக்கமாக இருக்கலாம். "சில தடைகளைத் தகர்க்க நாங்கள் தயாரா?" என்பது கேள்வியாகும்.

கொவிட்- 19 கொள்கைப் பிரதிபலிப்புக்கள்: கொள்கை வகுப்பவர்களுக்கானதொரு குறிப்பு

இந்த கட்டுரை 2020 ஏப்ரல் மாதத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. தற்போது சில தகவல்கள் மொழிபெயர்ப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன

கொள்கை வகுப்பவர்களுக்கானதொரு குறிப்பு

இதை எழுதும் நேரத்தில் உலகளாவிய ரீதியில் 1,100,000 க்கும் அதிகமான நோயாளர்களும் மற்றும் 64,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களும் உள்ளன . 1மானுடம் ஒரு உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. சுகாதாரத் துறை, பாதுகாப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் தங்கள் அர்ப்பணிப்புக்காக பாராட்டையும் நன்றியையும் பெற வேண்டும்.

இது போன்ற ஒரு நெருக்கடி சூழ்நிலையில், மனித உயிர்களைப் பாதுகாப்பதே முதல் முன்னுரிமையாகும். இது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது. பாடசாலைகளும் பணியிடங்களும் மூடப்பட்டுள்ளன, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஒரு முடக்கம் என்ற வடிவில் நடைமுறையில் இருப்பதால், பொருளாதார நடவடிக்கைகள் நின்றுபோய்விடும் நிலையை அண்மித்துள்ளன. குறிப்பாக, நமது சனத்தொகையில்2 கிட்டத்தட்ட 30%  மற்றும் மொத்தத் தேசிய உற்பத்தியில் 38% ஆகவுமுள்ள மேல்  மாகாணமானது உயர்ந்தளவு அபாயமுள்ள இடமாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளது.3​  பொருளாதாரத் திணறல் மற்றும் தொற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் பிரதிபலிப்புக்கள் தீவு முழுவதும் எதிரொலிக்கும். பொது சுகாதாரம் முதன்மை அக்கறையுடன் இருக்க வேண்டும், பொருளாதார அழுத்தம் கிட்டத்தட்ட சமமான அவநம்பிக்கையான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

போரின் முன்னணியில் இருப்பவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவான புரிதல் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இது போன்ற அவசரகால சூழ்நிலைகளில் கொள்கை முடிவுகள் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வரலாறு காட்டுகிறது.

கொவிட்-19 தொற்றுநோயை இலங்கை கையாள்வதால், கடினமான முடிவுகளை எடுப்பதற்கு கொள்கை வகுப்பாளர்களுக்கு உள்ளீடாக நாங்கள் பின்வருவனவற்றை வழங்குகிறோம்.

இலங்கையின் பொருளாதார நிலைமை பற்றியதொரு கண்ணோட்டம்

பலவீனமான பொருளாதார நிலைமைகளுடன் இலங்கை நெருக்கடிக்கு வந்தது. 2019 ஆம் ஆண்டில் எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 2.6%4​ ஆக இருந்தது. சுற்றுலா போன்ற முக்கியமான துறைகள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களிலிருந்து இன்னும் மீண்டு வருகின்றன. குறுகிய கால செலவின உயர்வு நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பிறகு சுற்றுலாவின் வருவாய் கணிசமாகக் குறைவடைந்துள்ளது. சுற்றுலாவின் உடனடி எதிர்காலம் நன்றாக இல்லாதிருப்பதுடன் 2019 ஆம் ஆண்டில் வருமானம் 10% ஆல் குறைவடைந்துள்ளது5​.

ஒட்டுமொத்தமாக எங்கள் ஏற்றுமதிகள் சென்மதி நிலுவையில் நடப்புக் கணக்கிற்கு உதவுவதற்குப் போதுமான அளவு உயரவில்லை. இதற்கிடையில், நமது அந்நிய செலாவணி ஒதுக்கமானது கடன் வாங்கிய நிதியின் ஒரு பகுதி உட்பட சுமார் 7.0 பில்லியன் டொலராகவே உள்ளது. 6 இறுதியாக, எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் 2020-20237 ஏறத்தாழ 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாரிய கடன் மீளச் செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கொவிட் 19 இலங்கை பொருளாதாரத்தில் கணிசமான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தாக்கத்தில் வேலை நாட்களின் இழப்பு காரணமாக வெளியீட்டில் நேரடி வீழ்ச்சி  மற்றும் வைரஸ் பரவலைத் தடுப்பதற்குரிய பௌதீக இடைவெளி,  உடனடி அவசரத் தேவையைக் கையாளுவதற்கான மருத்துவம் மற்றும் பிற செலவுகள் என்பன உள்ளடங்கும். வருமானத்தில் உடனடி விளைவு இருக்கும் என்றாலும், வைரஸ் பரவுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் கொள்கைகளிலிருந்து நடுத்தர மற்றும் நீண்ட கால விளைவுகள் இருக்கும். தைத்த ஆடைத் துறையைப் நோக்குகையில் கொவிட் -19 உருவாக்கிய பொருளாதார செலவுகளைக் காணத் தொடங்கினோம். இலங்கையிலிருந்தான மொத்த ஏற்றுமதியில் 42% கணக்கில்8, இந்தத் துறையானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்9 வருவாய் இழப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8% உள்ள வெளிநாட்டிலிருந்து உட்பாய்ச்சப்படும் பணம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது​10, இது அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும். பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வாழ்வாதாரங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடுவது கடினம், ஆனால் நமது உழைக்கும் மக்கள்தொகையில் 66% பங்காகவுள்ள  முறைசாரா துறையில் உள்ளவர்கள்11, மிகவும் பாதிக்கப்படுவர் என்பது தெளிவானதாகும். சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, இலங்கையின் உழைக்கும் மக்கள் தொகை 8 மில்லியன் பேரில், 2.6 மில்லியன்12 பேர் விவசாய மற்றும் விவசாயம் அல்லாத துறைகளிலுள்ள சுயதொழில் புரிவோர் ஆவர். தற்போது நாட்டில் விவசாய நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதால், 1.5 மில்லியன்13 விவசாயம் அல்லாத சுயதொழில் புரிவோர் இந்த முடக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 3.5 மில்லியன்14​ தனியார் துறை ஊதியம் பெறுபவர்களும் பொருளாதார அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஏனெனில் கம்பனிகள் வரையறுக்கப்பட்ட பணப்புழக்கத்தின் போது மறுசீரமைப்பு மற்றும் ஆட்குறைப்புக்களை மேற்கொள்ளும்.

பொருளாதாரத்திற்கான இந்த அதிர்ச்சியானது நாம் சந்தித்ததை உலகளாவிய நிதி நெருக்கடியை (2008-2012) விட பெரியதும் மற்றும் ஆழமானதுமாகும். நிதி நெருக்கடியைப் பொறுத்தவரையில், நேரடியாக பாதிக்கப்பட்ட நாடுகள் கொவிட் -19 ஐ விட மிகக் குறைவாகவே இருந்தன, மேலும் இந்த தொற்றானது உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிலிருந்து இலங்கைப் பொருளாதாரம் முழுமையாக மீள முன்னர் அதைத் தொடர்ந்து வந்துள்ளது.

குறுகிய காலப் பிரச்சினைகளைக் கையாளுவதற்குத் தற்போது காணப்படும் பொறிமுறைகளைப் பயன்படுத்துதல்

உள்ளூர் வாக்கெடுப்பு நிறுவனமான வான்கார்ட் சர்வேயின் சமீபத்திய கணக்கெடுப்பில், குறைந்த பட்சம் மக்கள் தொகையில் கால் பகுதியினர் தேவையான உணவு அல்லது மருந்தை அணுகுவதற்குக் கஷ்டப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.15 ஒரு பெரிய வயது முதிர்ந்த சனத்தொகையுடன் காணப்படும் இலங்கையர்கள் வழக்கமான மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பொருட்களை வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் அரசாங்கத்தின் மையப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையினால் நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு முனையிலும் பிழியப்படுகின்றனர்.

தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சமூகத்தின் உடனடி பாதுகாப்புக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. மக்கள் பரிமாறிக் கொள்ள சுதந்திரமாக இருக்கும்போது பொருளாதாரம் செயல்படுகிறது. நாட்கள் வாரக்கணக்குகளாக முடக்கம் காணப்படும் போது, குடிமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விட சிக்கலான தேவைகள் அதிகமாக இருக்கும்.

பொருளாதாரத்தின் சில பகுதிகள் குறைந்த ஆபத்தில் இயங்குவதற்கும், ஊரடங்கு உத்தரவை மீறுவதற்கான சலுகைகளை குறைப்பதற்கும், அத்தியாவசிய சேவைகளின் வரையறையை விரிவாக்குவதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

இது வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் அதிக உற்பத்தித்திறனுடன் அவ்வாறு செய்ய அனுமதிக்கும், அதே நேரத்தில் பொருளாதாரம் இயங்குவதற்கான சில இடங்களையும் உருவாக்குகிறது. விநியோகப் பணியாளர்கள் உட்பட விநியோக சங்கிலி பாத்திரங்களுக்கான ஊரடங்கு உத்தரவுகளில் மீளமுடியாத மற்றும் நிலையான கொள்கையை உருவாக்குவது நுகர்வோர் மற்றும் இந்த நேரத்தில் தங்கள் உற்பத்திகளை நுகர்வோரின் கைகளில் ஒப்படைக்க முடியாதுள்ள உற்பத்தியாளர்கள் மீதான அழுத்தத்தை எளிதாக்கும்.

தற்போதுள்ள வழிமுறைகள் மற்றும் சந்தைகள் நெருக்கடிக்கு முன்னர் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது. தற்போதைய நிலைமைகளின் கீழ், அவற்றை அரசினை மையப்படுத்திய தீர்வுகளால் பிரதியீடு செய்வதை விட,  இந்தச் செயல்முறையை எளிதாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கானதொரு வழிகாட்டும் வரைபடம்

தொற்றுநோய்க்கான கொள்கைப் பிரதிபலிப்புக்களை கட்டங்கட்டமாகச் சிந்திப்பது பயனுள்ளதாகும். முதல் கட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மூலம் மக்களில் பெரும்பாலோருக்கு சுய தனிமைப்படுத்தலின் ஒரு மூலோபாயத்தைப் பயன்படுத்தி வைரஸ் பரவுவதை மெதுவாக்குவதே இதன் நோக்கம். எனினும், ஊரடங்கு உத்தரவை என்றென்றும் நீடிக்க முடியாது, ஏனெனில், இது ஒரு குறிப்பிடத்தக்க மனித மற்றும் பொருளாதார செலவை  ஏற்படுத்துகின்றது. எனவே பொருளாதாரத்தைப் படிப்படியாக திறக்க 2 ஆம் கட்டமொன்றை அனுமதிக்கும் வெளியேறும் மூலோபாயத்தில் அரசாங்கம் செயல்படுகிறது. கொவிட்-19 ஐத் தணிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் வினைத்திறன்மிக்க கருவிகள் கிடைக்கும் வரை இந்த இரண்டாம் கட்டத்திற்கு இன்னும் கடுமையான பௌதீக இடைவெளி மற்றும் பிற பாதுகாப்பு தேவைப்படும்.

புரிந்துகொள்ளத்தக்க வகையில், அவசரகால நிலைமை சீரற்ற கொள்கைக்கு தன்னை ஆளாக்கியுள்ளது. நாடு முழுவதும்  ஒரு சீரற்ற வகையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகின்றது. தற்காலிக கொள்கை என்பது திட்டமிடுவதற்குக்  கடினமானதாகும், இது அனைத்து இலங்கையர்களிடமும் நாட்டின் பொருளாதாரத்திலும் அடுத்தடுத்த பரந்த விளைவுகளை ஏற்படுத்தும்.

குறுகிய கால அவசரகால நிலைமை சீரடையத் தொடங்கும் போது, ​​கொள்கை வகுப்பாளர்கள் தொற்றுநோயியல் நிபுணர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், தனியார் துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து மீண்டும் திறப்பதற்கு வழிகாட்டும் ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டும். இது மக்களுக்கும் வணிகங்களுக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான செலவைக் குறைப்பதற்காக அவர்களின் செயல்பாடுகளை திறம்பட திட்டமிட உதவும்.

பரிசோதனையை விரிவுபடுத்துவதற்கான செயல்திட்டம்

"கண்டுபிடித்தல்- பரிசோதித்தல் – சிகிச்சையளித்தல் (trace - test – treat)" முறையானது தென் கொரியா மற்றும் பிற நாடுகளில் வினைத்திறன் மிக்கது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூகத் தொற்று ஏற்படுமா எனக் கண்டறிவதற்காக பரி சோதனையை விரிவுபடுத்துவதற்கான மார்ச் 31 ஆம் திகதிய16 அரசாங்கத்தின் தீர்மானமானது சரியான திசையிலான ஒரு படியாகும்.

தற்போதுள்ள சோதனைத் திறனைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் போதுமான அளவு செயல்படுகிறதா என்று சுயாதீன மருத்துவ பயிற்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA), இலங்கை மருத்துவ சங்கம் போன்ற பிற குழுக்களும் விரிவாக்கப்பட்ட பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. தற்போது, ​​தொற்றுநோயியல் பிரிவின் வரையறைக்குட்பட்ட பரிசோதனை17 (இடைக்கால விடய வரையறைகள்) வழிகாட்டுதல்களின்படி பரிசோதனையானது, கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் -19 நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களிடையே மேற்கொள்ளப்படுகின்றது. கடுமையான நிமோனியா நோயாளிகள் (வேறு நோய்க் காரணங்கள் மூலம் விளக்கமுடியாத) மற்றும் அறிகுறிகளுடன் கூடியவர்கள், பரிசோதிப்பது பொருத்தமானது என ஒரு மருத்துவர்  இனங்கண்டால் கூட பரிசோதனை செய்யலாம். காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளை அனுபவிக்கும் நபர்களை உள்ளடக்குவதற்காக இந்த வரையறை விரிவாக்கப்பட்டது, ஆனால் லேசான அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கும் சோதனைக்கு அணுகல் இருப்பதை உறுதிப்படுத்த இந்த வரையறை விரிவாக்கப்பட வேண்டும்.

சாங்கம், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நாட்டின் தற்போதைய சோதனைத் திறனைப் பயன்படுத்த ஒரு தெளிவான மற்றும் கவனம் செலுத்தும் செயல் திட்டத்தை கொள்கை வகுப்பாளர்கள் உருவாக்குவது முக்கியமானதாகும். நாட்டில் அதன் சோதனைத் திறனைப் பெறுவதற்கும் விரிவாக்குவதற்கும் சர்வதேச விநியோகச் சங்கிலிகள் மற்றும் சாத்தியமான நன்கொடையாளர்களுடன் ஈடுபடுமாறு  அரசாங்கம் தனியார் துறையை  ஊக்குவிக்கலாம்.

முகக் கவசங்களை அணியும் கொள்கையை மீள்பரிசீலித்தல்

தனிநபர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பயணங்களைக் கொண்டிருத்தல், கடுமையான சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணிவதைப் பின்பற்றுதல் ஆகியவற்றிலே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுப்பது தங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின்உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்னவென்றால், நீங்கள் ஒரு மருத்துவ பணியாளர் அல்ல, உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், நீங்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை, இந்த பரிந்துரையானது உலகளாவிய முகக் கவசங்களின் பற்றாக்குறையால் இயக்கப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.18​

மிக சமீபத்தில், அமெரிக்கா அவர்களின் நிலைப்பாட்டை மாற்றியது, அவர்களின் நோய்க் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் முகக் கவசங்களின் பயன்பாட்டைப் பின்வருமாறு கூறிப் பரிந்துரைத்தது.

“சமீபத்திய ஆய்வுகள் கொரோனா வைரஸின் குறைந்த அறிகுறிகள் (“அறிகுறியற்றவர்கள்”) மற்றும் அறிகுறிகளை இறுதியில் காட்டுபவர்கள் (“அறிகுறிக்கு முன்பு”) அறிகுறிகளைக் காண்பிக்கும் முன் வைரஸைப் பரப்பலாம் என்று காட்டுகின்றன. இதன் பொருள், அருகிலேயே தொடர்பு கொள்ளும் நபர்களிடையே வைரஸ் பரவக்கூடும் - உதாரணமாக, பேசுதல், இருமல் அல்லது தும்மல் - அந்த நபர்கள் அறிகுறிகளை வெளிப்படுத்தாவிட்டாலும் கூட வைரஸ் பரவக்கூடும். இந்த புதிய சான்றுகளைக் கருத்திற்கொண்டு, விசேடமாக குறிப்பிடத்தக்க சமூக அடிப்படையிலான நோய்ப் பரவல் உள்ள பகுதிகளில், பிற சமூக இடைவெளி நடவடிக்கைகளை பராமரிப்பது கடினமான பொது அமைப்புகளில் துணியிலான முகக் கவசங்களை அணியுமாறு கட்டுப்பாட்டு மத்திய நிலையமானது பரிந்துரைக்கிறது(உ.ம். மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள்).”19

முன்னணியில் இருப்பவர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம் என்றாலும், பரவலான முகக் கவசங்களின் பயன்பாடு நோயின் பரவலைக் குறைக்கும் என்பது பொதுவான மருத்துவக் கருத்தாகும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த நெருக்கடியின் முன்னணியில் சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் முகக் கவசங்களை வழங்குவதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாலும், ஒருவரின் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் பொதுவில் முகக் கவசப் பயன்பாட்டிற்காக பொது மக்களுக்கான பரிந்துரை இருக்க வேண்டும். முகக் கவசத்தை அணிவது தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்தல், மற்றும் விரைவாக அதிகரிக்கும் முகமூடி உற்பத்தியில் தனியார் துறையுடன் தீவிரமாக ஈடுபடுதல் மிக முக்கியமானதாகும்.

சந்தைகளைச் செயற்பட வைத்தல்

இந்த நெருக்கடியின் பொருளாதார விளைவுகளை நிர்வகிப்பது அரசாங்கத்தின் முக்கிய இலக்கு மையமாக இருக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கத்தை மென்மையாக்குவதற்கும், வரவிருக்கும் மாதங்களில் இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறுகிய கால பொருளாதார தாக்கத்தை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்றாலும், இன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நடுத்தரத்திலிருந்து நீண்ட காலத்திற்கு பிரச்சினையை அதிகரிக்காதிருப்பது மிக முக்கியமாகும்.

விலைக் கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதும் அவற்றின் நடுத்தர மற்றும் நீண்டகாலத் தாக்கத்தினை விளங்கிக்கொள்ளலும்

அரசாங்கம் ஏற்கனவே பலவகையான பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எட்வகாடா நிறுவக ஆய்வு காண்பித்தபடி, சாதாரண காலங்களில் கூட இந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் அரசியல் அரங்காக செயல்படுகின்றன, அரசாங்கத்தின் சொந்த தரவு பல நுகர்வோர் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விகிதத்திற்கு மேல் விற்கப்படுவதைக் காட்டுகிறது. ஒரு முடக்கத்தின்போது, விலைக் கட்டுப்பாடுகள் விநியோக தடைகளை அதிகப்படுத்தும். பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, விலை என்பது ஒரு ஊக்கத்தொகையால் சுற்றிவைக்கப்பட்ட ஒரு சமிக்ஞையாகும். இது பற்றாக்குறையையும் மிகைகளையும் சமிக்ஞை செய்கிறது, ஒரு உற்பத்தியாளருக்கு இலாபம் ஈட்ட முடியாவிட்டால், அவர்கள் சிக்கல் மற்றும் ஆபத்தைச் சந்தித்துப் பொருளைப் பெறமாட்டார்கள். நிச்சயமாக அவசரகால சூழ்நிலையில் இது பற்றாக்குறையை மட்டுமே ஏற்படுத்தும்.

எதிர்வரும் மாதங்களில், நாம் ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார வீழ்ச்சியைக் காணலாம், இதன் போது மேலும் விலைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் விரும்பக்கூடும். பொருளாதார மீட்புக்கான விரைவான பாதை சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் - பாதிக்கப்படக்கூடிய மக்கள் அளவுக்கதிமாகப் பாதிக்கப்படுவதால், குறுகிய காலத்தில் பாதுகாப்பு வலையமைப்புக்களை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த முடியும்.

திட்டமிட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செல்லல்

அந்நியச் செலவணி வீதத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், உள்ளூர் விவசாயத் தொழிலைப் பாதுகாப்பதற்கும் ஒரு முயற்சியாக, அத்தியாவசியமற்ற அனைத்து இறக்குமதியையும் நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.20 இதை எழுதும் வரை, இந்த அறிக்கையை மத்திய வங்கி அல்லது நிதி அமைச்சு உறுதிப்படுத்தாமையானது, கொள்கை நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. ஒரு குறுகிய கால நடவடிக்கையாக, ரூபாயைப் பாதுகாப்பதற்காக, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத அந்த பொருட்களின் எதிர்மறை பட்டியலை அறிமுகப்படுத்துவது பரிசீலிக்கப்படலாம், இருப்பினும் இது ஒரு குறுகிய கால கால அளவிலான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

நீடித்த இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அரசாங்கம் விதித்த ‘அத்தியாவசிய பட்டியல்கள்’ நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் முக்கிய விநியோகச் சங்கிலிகளின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தொடர்ச்சியான விளைவுகளை உருவாக்கும். நமது ஏற்றுமதி தொழில்கள் மற்றும் உற்பத்தித் துறைக்குப் புத்துயிரளித்தல் இலங்கையில் பொருளாதார மீட்சிக்கு முக்கியமாக இருக்கும். 201721 ஆம் ஆண்டில் இலங்கையின் இறக்குமதியில் 46% இடைநிலை பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகும், மேலும் நீண்ட கால இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த நெருக்கடி கடந்தபின்னர் உள்ளூர் வணிகங்களின் இழப்புகளை மீட்டு இழப்புகளை ஈடுசெய்யும் திறனை பாதிக்கும். இது உள்நாட்டு சலுகைகளை போட்டி அல்லாத இறக்குமதி மானியங்களுக்கு சாதகமாக்கும், இதன் மூலம் போட்டிப்  பிரதியீட்டுப் பொருள் இறக்குமதி ஊக்குவிக்கப்பட மாட்டாது.

மீட்டெடுப்பை நோக்கி நகருதல்

முன்னோக்கிச் செல்லும்போது, ​​நம்பத்தகுந்த பேரினப் பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் பணவியல் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை ஆகியன ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். கொவிட்-19 காரணமாக குறுகிய காலத்தில் அதன் செயல்திறன் குறைவாக இருக்கும் என்றாலும், தற்போதைய சிரமங்களை சமாளிக்க உறுதியான அரசாங்கத்திற்கு இது சமிக்ஞை செய்யும்.

இலங்கையின் பொது நிதி நிலைமை நம்பிக்கைக்குரியதல்ல. கொவிட் -19 நெருக்கடிக்கு பிரதிபலிப்புச் செய்யும் வகையில் அரசாங்க செலவினங்களில் செங்குத்தான உயர்வைக் காண்போம், மேலும் ஒரு சாதாரண ஆண்டிற்கான செலவினங்களுடன் வேகத்தைத் தக்கவைக்காத அரசாங்க வருவாய் இந்த விஷயத்தில் பரிதாபகரமாக போதுமானதாக இருக்காது. பலவீனமடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் புத்துணர்ச்சியுடன் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், அரசாங்கம் புதிய வரிக் குறைப்புகளை அறிமுகப்படுத்தியதால், பொது நிதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய சூழலில், எங்களிடம் இருந்து பெறுவதற்கு குறைந்த வரி அடித்தளமேயுள்ளது. அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கக்கூடிய மோசமான வணிக செயல்திறனால் இது  மேலும் அதிகரிக்கக் கூடும்.

உடனடி செலவினங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கடன் திருப்பிச் செலுத்துவதை அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும், இது 2020 ஆம் ஆண்டில் 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். இந்த திருப்பிச் செலுத்துதலுக்கான எங்கள் திறன் கேள்விக்குரியதாகவுள்ளதுடன் கொவிட் – 19 இனைக் கருத்திற்கொண்டு மேலும் கடன் நிவாரணம் கோருவதற்கு சர்வதேச நன்கொடை நிறுவனங்களை ஜனாதிபதி அணுகியுள்ளார். 22​

எமது பொருளாதார யதார்த்தம் என்னவென்றால், ஒரு நல்ல சீர்திருத்த தொகுப்பின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வெளி நிதி பெற வேண்டும். கடன்களை வழங்குவதை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான ஈடுபாடுகளை நாம் தீவிரமாக ஆராய வேண்டும். மிகவும் தேவைப்பட்ட 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்23 பெறுமதியான விரைவான உலக வங்கி திட்டத்தை இப்போது பெற்றுள்ள நிலையில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உறுதியான ஈடுபாட்டை நோக்கி செயல்பட வேண்டும். திறைசேரி பெரும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் நிதி ஆதாரமாக இருப்பதைத் தவிர, ஒரு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமும் நாட்டிற்கு தேவையான நிதி ஒழுக்கத்தை கொண்டு வரும். ஒட்டுமொத்த பேரினப் பொருளாதாரக் கொள்கையானது  பணவீக்கம் மற்றும் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையை நிலையானதாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் இது உண்மையான துறைரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேவையான சூழலை உருவாக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளின் இலவச பரிமாற்றத்தை உறுதி செய்வதற்கான வர்த்தக சீர்திருத்தம் மற்றும் வணிகங்களை மீட்க மற்றும் மறுதொடக்கம் செய்ய உதவும் உள்நாட்டு ஒழுங்குமுறை சீர்திருத்தம் ஆகியன முன்னுரிமை வழங்கப்படும்  மையங்களாக இருக்க வேண்டும்.

மீட்புக்கான பாதையில் தனியார் துறைப் பங்கேற்பு முக்கியமானது. சுயாதீன எண்ணம் கொண்ட நிபுணர்களுடனான தெளிவான, நிலையான ஈடுபாடு, மற்றும் இந்த நபர்களை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் ஆலோசனைத் இயல்திறனில் உள்ளடக்குவது அரசாங்கத்திற்கு நம்பகத்தன்மையை வழங்குவதுடன் ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதில் இலங்கை தீவிரமாக இருப்பதற்கான சமிக்ஞையாகவும் அமையும்.

நாடுகளை ஒப்பிடல் (2020.04.07 ஆம் திகதியன்று )


Screenshot (338).png

குறிப்புக்கள்

  1. World Health Organization,​Coronavirus (COVID-19)​,April 7, 2020, https://who​.sprinklr.com/​,(Accessed April 07, 2020).

  2. Government of Sri Lanka, Ministry of National Policies and Economic Affairs, Department of Census and Statistics, Censusof Population and Housing Sri Lanka 2012​,2012, http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/SriLanka.pdf​,(Accessed April 07, 2020).

  3. Government of Sri Lanka, Ministry of Finance and Mass Media, Central Bank of Sri Lanka, Press​ release​,September 25, 2019, https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_images/press_20190925_Provincial_Gross_Domesti c_Product_-_2018_e.pdf​,(Accessed April 07, 2020).

  4. Central Bank of Sri Lanka, “GDP Growth,” CentralBank of Sri Lanka​, https://www.cbsl.gov.lk/en/economic-and-statistical-charts/gdp-growth-chart,​(Accessed April 07, 2020).

  5. EconomyNext, “Sri Lanka tourist earnings down 10-pct in Nov 2019,” EconomyNext​​,December 14, 2019, https://economynext​.com/sri-lanka-tourist-earnings-down-10-pct-in-nov-2019-35822/​,(Accessed April 07, 2020).

  6. EconomyNext, “Sri Lanka ends 2019 with US$7.6bn in forex reserves,” EconomyNext​​,January 12, 2020, https://economynext.com/sri-lanka-ends-2019-with-us7-6bn-in-forex-reserves-39859/,​(Accessed April 07, 2020).

  7. Government of Sri Lanka, Ministry of Finance,​Budget Speech 2018, http://www.treasury.gov.lk/documents/10181/470884/budgetspeech2018E.pdf/9a9b081b-a709-418f-88 ee-64f397db6ab4,​(Accessed April 07, 2020).

  8. Verité Research Institute, “COVID-19: Insights and Information,” VeritéResearch​, https://www.veriteresearch.org/insight/covid19-sri-lanka/,​(Accessed April 07, 2020).

  9. Mahadiya Hamza, “Sri Lanka apparel industry to lose US$1.5bn as Coronavirus cripple buyers,” EconomyNext​,March 31, 2020, https://economynext.com/sri-lanka-apparel-industry-to-lose-us1-5bn-as-coronavirus-cripple-buyers-63205 /​,(Accessed April 07, 2020).

  10. Daily Mirror, “Workers’ remittances to feel coronavirus pinch,” DailyMirror​,March 12, 2020,​http://www.dailymirror.lk/business-news/Workers-remittances-to-feel-coronavirus-pinch/273-18473 1,​(Accessed April 07, 2020).

  11. Ramani Gunatilaka, InformalEmployment in Sri Lanka: Nature, Probability of Employment, and Determinants of Wages​,(New Delhi: ILO Publications, 2008), page 3, https://www.ilo.org/wcmsp5/groups/public/---asia/---ro-bangkok/---sro-new_delhi/documents/publicatio n/wcms_123348.pdf​,(Accessed April 07, 2020).

  12. Government of Sri Lanka, Ministry of National Policies and Economic Affairs, Department of Census and Statistics, QuarterlyReport Of The Sri Lanka Labour Force Survey: Third Quarter​,2019, page 3, http://www.statistics.gov.lk/samplesurvey/2019Q3report.pdf,​(Accessed April 07, 2020).

  13. Government of Sri Lanka, Ministry of National Policies and Economic Affairs, Department of Census and Statistics, QuarterlyReport Of The Sri Lanka Labour Force Survey: Third Quarter​,2019, page 3, http://www.statistics.gov.lk/samplesurvey/2019Q3report.pdf,​(Accessed April 07, 2020).

  14. Government of Sri Lanka, Ministry of National Policies and Economic Affairs, Department of Census and Statistics, QuarterlyReport Of The Sri Lanka Labour Force Survey: Third Quarter​,2019, page 3, http://www.statistics.gov.lk/samplesurvey/2019Q3report.pdf,​(Accessed April 07, 2020).

  15. EconomyNext, “63% Sri Lankans don’t think COVID-19 will spread into their area: Vanguard survey,” EconomyNext, April 4, 2020, https://economynext.com/63-sri-lankans-dont-think-covid-19-will-spread-into-their-area-vanguard-survey-63890/,​(Accessed April 07, 2020).

  16. EconomyNext, “Sri Lanka to begin sample Covid-19 testing to check community transmission of Coronavirus,” EconomyNext​​,March 31, 2020, https://economynext.com/sri-lanka-to-begin-sample-covid-19-testing-to-check-community-transmission-of-coronavirus-63134/​,(Accessed April 07, 2020).

  17. Government of Sri Lanka, Ministry of Health, ProvisionalClinical Practice Guidelines on COVID-19 suspected and confirmed patients, March2020, http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/covid-19%20cpg%20_%20version%204. pdf​,(Accessed April 07, 2020).

  18. World Health Organization, WHODirector General’s opening remarks at the media briefing on Covid-19​, April 6, 2020, https://www.who.int/dg/speeches/detail/who-director-general-s-opening-remarks-at-the-media-briefing-o n-covid-19---6-april-2020​,(Accessed April 07, 2020).

  19. Center for Disease Control and Prevention, “Recommendation Regarding the Use of Cloth Face Coverings, Especially in Areas of Significant Community-Based Transmission,”​Centers for Disease Control and Prevention​,April 3 2020, https://www.cdc.gov/coronavirus/2019-ncov/prevent-getting-sick/cloth-face-cover.html​,(Accessed April 07, 2020).

  20. EconomyNext, “Sri Lanka to control imports except oil and medicines, grow vegetables”, EconomyNext​,April 2, 2020, https://economynext.com/sri-lanka-to-control-imports-except-oil-and-medicines-grow-vegetables-ministe r-63544/,​(Accessed April 07, 2020).

  21. World Bank, “Sri Lanka Intermediate goods Imports By Region 2017,” WorldIntegrated Trade Solution​, https://wits.worldbank.org/CountryProfile/en/Country/LKA/Year/2017/TradeFlow/Import/Partner/by-regi on/Product/UNCTAD-SoP2,​(Accessed April 07, 2020).

  22. EconomyNext, “Sri Lanka asks for international debt relief on Coronavirus hit”, EconomyNext​​,March 25, 2020, https://economynext.com/sri-lanka-asks-for-international-debt-relief-on-coronavirus-hit-61984/,​ (Accessed April 07, 2020).

  23. World Bank Press release, “World Bank fast tracks $128 Million Covid-19 support for Sri Lanka, April 2, 2020, https://www.worldbank.org/en/news/press-release/2020/04/01/world-bank-fast-track-support-covid19-c orona​,(Accessed April 07, 2020).


வரிகள் மற்றும் தீர்வைகள் பற்றிய நன்கு முன் கூட்டிய திட்ட மிடப்படாத சட்டத்தின் விளைவுகள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Tariffs and the law of unintended consequences

– அனீதா வருசவிதாரண

திட்டமிடப்படாத விளைவுகளின் சட்டம் எடம் ஸ்மித்துக்கு முந்தைய ஒரு கோட்பாடாகும், ஆனால் சமூகவியலாளர் ராபர்ட் கே. மேர்டன் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. சுருக்கமாக, செட்ரிஸ் பரிபஸின் கோட்பாட்டினை (பிற காரணிகளை நிலையானதாக வைத்திருத்தல்) ஒரு சந்தை சூழ்நிலையில் அடைய முடியாது என்பதால், விளைவுகளின் தொகுப்பை உருவாக்க அரசாங்கங்கள் தலையிடுவதன் பெறுபேறாக எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்படுகின்றன.

காலனித்துவ இந்தியாவும் நாகப் பாம்புகளும்

இது பிரித்தானியர் முதன்முதலில் இந்தியாவை காலனித்துவப்படுத்திய காலத்திலிருந்தே காணப்பட்ட இந்த சட்டம் ‘கோப்ரா எஃபெக்ட் (Cobra Effect)’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்த விஷப் பாம்புகள் குறித்து ஆங்கிலேயர்கள் புரிந்துகொள்ளக்கூடிய அக்கறை கொண்டிருந்தனர், நாகப்பாம்புகள் தெளிவாக சில கவலைகளுக்குக் காரணமாக இருந்தன.  இதற்கு அவர்கள் முன்வைத்த தீர்வு என்னவென்றால், கொல்லப்பட்ட ஒவ்வொரு நாகப்பாம்பிற்கும் ஒரு வெகுமதியை வழங்கியமை அருகிலுள்ள எந்தவொரு நாகத்தையும்  கைப்பற்றி கொல்ல உள்ளூர் மக்களுக்கு தெளிவான ஊக்கத்தை வழங்கியது. இது குறுகிய காலத்தில் நன்றாகச் செயற்பட்டாலும், ஆர்வமுள்ள நபர்கள் நாகப்பாம்புகளைத் தீவிரமாக இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்பதை ஆங்கிலேயர்கள் மெதுவாக உணர்ந்தனர்; இது ஊக்குவிப்பு வெகுமதிகளைச் சேகரிக்கும்  மிகவும் இலாபகரமான வணிகத்தை உருவாக்கியது. இது தொடர்பாகத்  தெளிவடைந்ததுடன், பிரித்ததானியர்கள் ஊக்குவிப்பு வெகுமதிகளை அகற்றினர். அப்போது இது ஒரு இலாபகரமான முயற்சியாக இல்லாதிருந்தமையால், இனப்பெருக்கம் செய்து வளர்த்தவர்கள் தங்கள் எல்லா நாகப்பாம்புகளையும் விடுவித்தனர். இதன் இறுதி விளைவாகப் பொது நாகப்பாம்புகளின் தொகை அதிகரித்தமையானது இது எதனை அடையவேண்டுமெனத் தலையீடு மேற்கொள்ளப்பட்டதோ அதற்கு முற்றிலும் எதிரானதாகும்.

இது ஒரு நல்ல கதைக்கு வழிவகுக்கும் அதே வேளையில், திட்டமிடப்படாத விளைவுகளின் சட்டத்தின் பொருளாதார யதார்த்தங்கள் பெரும்பாலும் மிகவும் மோசமானவையாகவுள்ளன. சந்தையில் தலையீடுகள் பெரும்பாலும் நன்கு திட்டமிடப்பட்டவையாகவிருந்த போதிலும் பின்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. இதற்கு ஒரு பிரகாசமான உதாரணம் தீர்வைவரிகள் விடயமாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையானது,  அண்மையில் அமெரிக்காவில் விதிக்கப்பட்ட ஒரு சலவை இயந்திரங்களுக்கான தீர்வையின் எதிர்பாராத விளைவுகளை விவரித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதனையும், அந்தக் கைத்தொழிலில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதனையும் கருத்திற்கொண்டே இந்தத் தீர்வை விதிக்கப்பட்டது. அந்த இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் தீர்வையின் செயல்திறனை மதிப்பீடு செய்தால், தீர்வைவரியானது ஒரு மகத்தான வெற்றியாகும்; அமெரிக்க துணிகழுவுதல் மற்றும் உலர்த்துதல் தொழில்துறையானது சுமார் 1,800 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியது. இது ஒரு வெற்றிக் கதையாக எளிதில் எழுதப்படலாம்.


சலவை இயந்திரங்களின் மீதான திட்டமிடப்படாத விளைவு (Cobra Effect)

எவ்வாறாயினும், இங்கே கவனம் தயாரிப்பாளர் மீது மட்டுமே உள்ளதுடன் நுகர்வோர் கதையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் திட்டமிடப்படாத விளைவு என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இப்போது அதிக விலை கொண்டவை என்பதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் விற்பனையை இழக்க நேரிடும் என்ற அச்சமின்றி பாதுகாப்பாக தங்கள் விலையை உயர்த்த முடிந்தது. இரண்டாவது திட்டமிடப்படாத விளைவு என்னவென்றால், உலர்த்திகளும் அதிக விலை கொண்டதாக மாறின. அமெரிக்காவில் சலவை இயந்திரங்களுக்கு ஒரு நிரப்பு நன்மை என்ற வகையில், உலர்த்தி உற்பத்தியாளர்கள் தங்கள் விலையை உயர்த்தவும், இலாபத்தை அதிகரிக்கவும் சரியான சாளரமாக இதைக் கண்டனர் (ஆடைத் தொழில்துறை இலங்கையை இந்த எதிர்பாராத விளைவுகளிலிருந்து காப்பாற்றும்).

 

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஃபோர்ப்ஸின் கருத்துப்டி இதனால், அமெரிக்க நுகர்வோர் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளனர். இந்த விலைவாசி அதிகரிப்பு மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் செலவு ஆகியவற்றை 1,800 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கியதன் மூலம் நியாயப்படுத்த முடியும் என்று ஒருவர் வாதிடலாம். உண்மை என்னவென்றால், ஒவ்வொரு வேலையும் அதிகரித்த நுகர்வோர் செலவில் 815,000 அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும். இந்த தீர்வைக் கொள்கையானது உள்ளூர் தொழில்துறையை தங்கள் சொந்த நுகர்வோரின் செலவில் திறம்படப் பாதுகாக்கிறது.


அமெரிக்காவில் சலவை இயந்திர விலைகளை இலங்கையர்கள் ஏன் கவனிக்க வேண்டும்?

இது திட்டமிடப்படாத விளைவுகளுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான எடுத்துக்காட்டாகத் தோன்றுகிறது என்பதையும், உள்நாட்டு நுகர்வோருக்கு இங்கு பாதிக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், சராசரி இலங்கை இதனை ஏன் கவனிக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களிடம் சன்லைட் சவர்க்காரமும் ஆடைத்துறையும் உள்ளன.

இலங்கை நுகர்வோர் கவலைப்பட வேண்டிய காரணம் என்னவென்றால் கடல் கடந்து அமெரிக்காவில் நிகழ்ந்த  அதே எதிர்பாராத விளைவுகள் இங்கே, நம் சிறிய தீவாகிய தேசத்திலும் நடைபெறுவதனால் ஆகும். தீர்வைவரி என்பது நீண்டகாலமாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் விருப்பமான கருவியாகும். தீர்வையானது ஆவணங்களில் மிகவும் நன்றாக இருக்கும், அந்த ஆவணமானது ஒரு தேர்தல் வாக்குறுதி அறிக்கை என்று குறிப்பிட்டால் நல்லது. ‘நாங்கள் எங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்போம்’ என்பது பல வாக்காளர்களின் மனதைக் கவரும் ஒரு வாக்குறுதியாகும். சிறந்த அச்சில் ‘உள்நாட்டு நுகர்வோரின் செலவில்’ என்பது விளம்பரப்படுத்தப்படும் ஒன்றல்ல, ஆனால் அது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வீட்டுப் பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் உணவு வரையிலான பொருட்களுக்குத் தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் காலணிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்ற வேறுபட்ட பொருட்களின் விலை இதனால் பாதிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு எவ்வாறு அதிகமாக உள்ளது என்பது குறித்து முழு நாடும் முறைப்பாடு செய்கின்றது, நியாயமற்ற முறையில் அதிக தீர்வைகள் இதற்குப் பின்னால் உள்ள இயக்கிகளில் ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக எங்களைப் பொறுத்தவரை, இந்தத் தீர்வைகளை விதிப்பது அமெரிக்க நுகர்வோர் எதிர்கொண்ட அதே தொடர்ச்சியான எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது. சராசரியாக இலங்கையரொருவர் வாராந்தம் பொருள்வாங்கி அதற்காகச் செலுத்தும் விலையானது, அது தெல்கந்தை சந்தையாகவிருப்பினும் சரி, நெருங்கிய பல்பொருள் அங்காடி அல்லது சந்தியிலுள்ள கடை எதுவாகவிருப்பினும் தீர்வைகளினால் பாதிக்கப்படுகின்றது. உருளைக்கிழங்கு, அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதற்கு இருக்க வேண்டிய விலையைவிட அதிக விலை கொண்டதாக இருக்கும், ஏனென்றால் தீர்வை வரிகள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையை உயர்த்துகின்றன, இது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நுகர்வோர் இழப்புடன் விலைகளை உயர்த்த அனுமதிக்கிறது.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தீர்வைகள் 45% முதல் 107.6% வரை இருக்கலாம். நமது பொருளாதாரத்தில் தீர்வைகளின் பங்கு,  அவற்றை விதிப்பற்குப் பின்னால் இருக்கும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட காரணம், தீர்வையின் பின்விளைவுகள் (அவை நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியதுடன் அவற்றைத் தள்ளுபடி செய்யவோ புறக்கணிக்கவோ முடியாது)  மற்றும் அவற்றை அகற்றுவதற்குத் துரிதமானதொரு பொறிமுறை ஆகியவற்றைப் பற்றித் தீவிரமாக மீளாய்வு செய்யப்பட வேண்டும். 

இறக்குமதி வரி எவ்வாறு வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
How import taxes drive up the cost of living

- ரவி ரத்னாசபபதி

" இந்தியா மற்றும் சீனா போன்ற ஜாம்பவான்களுக்கு பொருளாதாரத்தைத் திறப்பதற்கு முன்பு, தொழில்துறையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிறுவனங்களைப் பாதுகாக்க ஒரு ‘எதிர்மறை உற்பத்திப் பட்டியலை’ அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் தலையீட்டை இலங்கை இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கமானது (LCMA) தீவிரமாக நாடுகிறது." - டெய்லிஎஃப்டி 2017 செப்டம்பர், 25

மேற்கூறியவை இலங்கையில் பொதுவாக நடைபெறும்  ஒரு நிகழ்வாகிய - வெளிநாட்டுப் போட்டிகளிலிருந்து ஒரு கைத்தொழில்துறை பாதுகாப்பைத் தேடுதலுக்குரிய ஒரு உதாரணமாகும். இந்த பாதுகாப்பானது பொதுவாக ஒரு தீர்வையின் வடிவத்தை, அதாவது   இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புக்கு விதிக்கப்படும் ஆனால், அதன் உள்நாட்டு பிரதியீட்டிற்குப் பொருந்தாத   வரியின் வடிவத்தை எடுக்கும். மேற்கூறிய உதாரணத்தில், ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டாலும் கூட, தொழில்துறையினர் அனுபவிக்கும் தீர்வைப் பாதுகாப்பைத் தொடர வேண்டும் என்று இலங்கை இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கமானது (LCMA) கோருகிறது. (ஒரு FTA இன் “எதிர்மறை பட்டியலில்” உள்ள ஒரு பொருள் FTA க்கு உட்பட்டது அல்ல). உதாரணமாக, இறக்குமதி செய்யப்படும்         விசுக்கோத்துக்களுக்கு மொத்தம் 107% வரி விதிக்கப்படுகிறது, விசுக்கோத்துக்கள் எதிர்மறை பட்டியலில் இருந்தால், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்த வரி தொடரும்.

தீர்வைவரி விதிக்கப்பட்டாலும், இது பொதுவாக வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் தயாரிப்புக்கு வசூலிக்கும் விலையை குறைக்காது. எனவே இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியின் உள்நாட்டு விலை தீர்வையின் அளவுக்கு  உயர்கிறது.


இந்த இறக்குமதிகளுடன் போட்டியிடும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியை செலுத்த வேண்டியதில்லை, எனவே இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியை விட ஒரு நன்மை இருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை உயரும்போது, ​​உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த விற்பனை விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளனர், ஏனெனில் போட்டியிடும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இப்போது விலை அதிகம் ஆகும்.

உள்நாட்டுத் தயாரிப்பாளர் தனது விலையை உயர்த்துவாரா? ஆம், இல்லையெனில் எந்த அர்த்தமும் இல்லை. உள்நாட்டு உற்பத்தியாளர் தனது விலைகளை அதே மட்டத்தில் நிர்ணயித்தால், இறக்குமதிக்கு வரி விதிக்கப்படாவிட்டால், இறக்குமதியிலிருந்து தீர்வைப் பாதுகாப்பைப் பெறுவதில் எந்த அர்த்தமும் இருக்காது. உள்நாட்டு உற்பத்தியாளர் தனது தயாரிப்பை அதிக விலைக்கு விற்க உதவுவதே தீர்வையின் நோக்கமாகும். உள்நாட்டு உற்பத்தியாளர் தீர்வையின் விளைவாக முன்னரைவிடச் சிறந்த பயனைப் பெறுவார்.

நுகர்வோருக்கு என்ன நடக்கும்?

 தீர்வை விதிப்பதன் மூலம் உற்பத்தியின் உள்நாட்டு நுகர்வோர் சமமாகப் பாதிக்கப்படுகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளூர் தயாரிப்புக்கள் இரண்டிற்குமே அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டும்.

வேறு வசனங்களில் கூறுவதானால், உள்நாட்டு தொழில்துறைக்கான பாதுகாப்பு உண்மையில் உள்நாட்டு நுகர்வோரால் உயர்ந்த விலைகள் என்ற வடிவத்தில் செலுத்தப்படுகிறது.

தீர்வையை விதிக்கும் அரசாங்கத்தின் நிலை என்ன?

உள்ளூர் உற்பத்தியில் அவர்கள் சேகரிக்கவில்லை என்றாலும், எந்த அளவு இறக்குமதி செய்யப்பட்டாலும், அரசாங்கமானது தீர்வை வருமானத்தைச் சேகரிக்கிறது. இறக்குமதியின் விலையை உயர்த்துவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளருக்கு அரசாங்கம் உருவாக்கும் நன்மை உற்பத்தியாளரால் சேகரிக்கப்படுகிறது. இந்த மிகை "வாடகை" என்று அழைக்கப்படுகிறது, அவற்றில் மேலும் கீழே தரப்பட்டுள்ளது.

 தீர்வையை விதித்ததால், எங்களுக்கு இரண்டு உள்நாட்டு வெற்றியாளர்கள் (உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் அரசாங்கம்) மற்றும் ஒரு உள்நாட்டுத் தோல்வியடைந்தவரும் (உள்நாட்டு நுகர்வோர்) உள்ளனர்.

போட்டியிடும் இறக்குமதிகள் மீதான தீர்வைக்கு நுகர்வோரிடமிருந்து அதிக விலை வசூலிக்கக்கூடிய உள்ளூர் உற்பத்தியாளர் ஒரு "வாடகையை" அனுபவிப்பதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரத்தில், ஒரு “வாடகை” என்பது கண்டுபிடிக்கப்படாத வெகுமதியாகும். உற்பத்தியாளர்  அதிக விலை வசூலிக்க முடியும் என்பது உயர்ந்த தரம் அல்லது சேவையின் காரணமாக அல்ல, மாறாக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியினாலாகும்.

சிறந்த தரம் காரணமாக தயாரிப்பாளருக்கு அதிக விலை வசூலிக்க முடிந்தால், மலிவான இறக்குமதிகள் கிடைத்தாலும் கூட, தயாரிப்பாளர் அதிக விலையைப் பெறுவார். இங்கு ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது.

நுகர்வோர் அதிக விலையுயர்ந்த பொருளை மட்டுமே வாங்குவர், அதே நேரத்தில் அவர்கள் பெறுவதை மதிப்பிட்டால் மட்டுமே குறைந்த விலையிலான பொருட்கள் கிடைக்கின்றன. உற்பத்தியாளர் தமது உற்பத்தி சிறந்தது மற்றும் அதிக விலை கொடுக்க வேண்டியது என்று நுகர்வோரை நம்ப வைக்க கூடுதலாக எதையாவது செய்ய வேண்டும்.

ஒரு தீர்வையானது இறக்குமதியின் விலையை உயர்த்தும்போது, ​​உள்ளூர் உற்பத்தியாளர்கள் நுகர்வோருக்கு பெறுமதியை அதிகரிக்காமல் அதிக விலைகளை வசூலிக்க முடியும். ஒரு தெரிவினைக் கொடுத்தால், நுகர்வோர் மலிவான மாற்று வழிகளைத் தேர்வுசெய்யலாம் - ஆனால் மாற்றுவழி இனி மலிவானதல்ல என்பதை தீர்வையானது உறுதி செய்கிறது. இதனால் நுகர்வோர் விரும்பாவிட்டாலும் மாற்றுவழி இல்லாததால், அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால்தான் இந்த உதாரணத்தில் உயர்மதிப்பானது உழைக்கப்படாதது என்று கூறப்படுகிறது. நுகர்வோர் சிறந்த பெறுமதியை உணராதபோதிலும் அதிக விலையைச் செலுத்துகிறார்கள்.

இதனால் உற்பத்தியாளர்கள் நுகர்வோரின் செலவில் இலாபமடைகின்றனர். முன்னர் குறிப்பிட்டபடி, உள்நாட்டு தொழில்களின் பாதுகாப்பிற்காக பணம் செலுத்துவது உள்நாட்டு நுகர்வோர் (வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் அல்ல) ஆவர். நிகர தாக்கம் என்பது நுகர்வோரிடமிருந்து உற்பத்தியாளருக்கு செல்வத்தை மாற்றுவதாகும், இது தீர்வையால் வசதி செய்யப்படுகிறது. இது சிறந்ததொரு கொள்கையாகுமா?

இது ஒரு சில தொழில்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், அது முக்கியமானதல்ல, ஆனால் இலங்கையில் இது எல்லாவற்றிலும் பரவலாக உள்ளது. பாதிக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பொதுவான வீட்டு பொருட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது ஒரு தெரிவு மட்டுமே-ஏனைய பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகமாக உள்ளது என்பதை இது விளக்குகிறது. உணவு (பழம், இறைச்சிகள், பாஸ்தா, பழப்பாகு) முதல் கழிப்பறைப் பொருட்கள் (சவர்க்காரம், ஷாம்பூ, பற்பசை) முதல் வீட்டு பொருட்கள் வரை அனைத்து தேவையான பொருட்களுக்கும் 62% -101% வரை வரிகள் அறவிடப்படுகின்றன.

Untitled design (11).png

உள்நாட்டுத் தொழில்களை ஆதரிப்பதற்காக இலங்கை நுகர்வோர் அதிக வாழ்க்கைச் செலவை அனுபவிக்கின்றனர். ஒரு தொழில்துறை தளத்தை உருவாக்க உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிப்பது நீண்ட காலத்தில் வளர்ச்சியை துரிதப்படுத்துமா என ஒரு விவாதம் உள்ளது.

யப்பான், கொரியா மற்றும் தாய்வான் ஆகியன கைத்தொழில் கொள்கையை (IP) கடைப்பிடித்தன, ஆனால் கொள்கையின் ஆதரவாளர்கள் கூட சரியான கைத்தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கவனிப்பு தேவை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். யப்பான் மற்றும் கொரியாவில் உருக்கு, கப்பல் கட்டுதல், கனரக மின் உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள் மற்றும் பின்னர் வந்த கார்கள் ஆகியன முக்கிய தொழில்களாகும். கனரக மற்றும் இரசாயனத் தொழில்கள் மற்றும் இலத்திரனியல் கைத்தொழில்களுக்குச் செல்வதற்கு முன்பு தாய்வானில் இலகு உற்பத்தி (மின் உபகரணங்கள், துணி) இருந்தது.

சவர்க்காரம், ஷாம்பூ, சலவை தூள், தரை மினுமினுப்பாக்கி, பாஸ்தா, பாலாடைக் கட்டி மற்றும் விசுக்கோத்துக்கள் போன்ற கழிப்பறை, வீட்டு சுத்திகரிப்புப் பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் இலங்கை இதைப் பின்பற்ற விரும்புகிறது.

Untitled design (12).png

வெற்றியடைவதற்கு, கைத்தொழில் கொள்கைகள் பொருளாதாரத்தில் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை வளர்க்க வேண்டும், இது தொழில்வாய்ப்புக்களை, குறிப்பாக அதிக வினைத்திறன் வாய்ந்த சிறந்த தொழில்வாய்ப்புக்களை  விரைவாக உருவாக்க வழிவகுக்கிறது. சரியான கைத்தொழில்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும்.

"நாட்டின் தொழில்நுட்ப இயல்திறன்கள் மற்றும் உலகச் சந்தை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இலக்குத் தொழில்கள் எவ்வளவு யதார்த்தமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது முக்கியமானதாகும்" [1]

க்ருக்மேன் [2] துறைகளைத் தேர்ந்தெடுப்பதில் கைத்தொழில் கொள்கை வகுப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட சில அளவுகோல்களை சுருக்கமாகக் கூறுகிறார்:

ஒரு தொழிலாளிக்கு அதிக பெறுமதி சேர்க்கப்பட்டவை. பணியாளருக்கு அதிக  பெறுமதி சேர்க்கும் வணிகங்களுக்கு வளங்கள் பாய்ந்தால் மட்டுமே உண்மையான வருமானம் உயர முடியும்.

  1. ஒரு தொழிலாளிக்கு அதிக பெறுமதி சேர்க்கப்பட்டவை. பணியாளருக்கு அதிக  பெறுமதி சேர்க்கும் வணிகங்களுக்கு வளங்கள் பாய்ந்தால் மட்டுமே உண்மையான வருமானம் உயர முடியும்.

  2. உருக்கு மற்றும் குறைகடத்திகள் போன்ற இணைப்புத் தொழில்கள். பிற தொழில்களால் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்படும் கைத்தொழில்கள் கைத்தொழில்மயமாக்கலின் சுழற்சியை உருவாக்க முடியும். யப்பானில் மலிவான, உயர்தர உருக்கானது, மூலப்பொருள் தயாரிக்கும்  கைத்தொழில்கள்-கப்பல்கள், மோட்டார்வாகனங்கள், தண்டவாளங்கள், என்ஜின்கள், கனரக மின் சாதனங்கள் ஆகியவற்றில் ஒரு போட்டி நன்மையைக் கொடுத்தது.

  3. உலக சந்தைகளில் தற்போதைய அல்லது எதிர்கால போட்டித்திறன். கைத்தொழிலானது இந்த பரீட்சையைச் சந்திக்க முடிந்தால், வளங்கள் திறமையாக ஒதுக்கப்படுகின்றன என்று நாம் கருதலாம். இணைப்பு நன்மைகள் பாய்வதற்கு போட்டித்திறன் முக்கியமானது.


அளவிலான பொருளாதாரங்களை அடைவதற்கு தெரிவுசெய்யப்பட்ட கைத்தொழில்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொள்ள வேண்டும் (விசேடமாக இல்லாவிட்டாலும்) - ஏனெனில் இது "அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனைத் தீர்மானிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு உறுதியான அளவுகோலை" வழங்குகிறது [3]. இலத்தீன் அமெரிக்காவில் கைத்தொழில் கொள்கை தோல்வியடைவதற்கு ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் ஏற்பட்ட தோல்வியானது முக்கிய காரணமாகும். (சாங், 2009)

ஏற்றுமதியை நோக்கிய தன்மை கொண்ட போட்டித்தன்மையையும் உறுதி செய்கிறது. கொள்கையின் நோக்கம் திறமையின்மையைப் பாதுகாப்பதல்ல, ஆனால் உற்பத்தித்திறனை மேம்படுத்துதலாகும்.

எனவே தொழில்துறைக்கான ஆதரவு நிபந்தனைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

"கைத்தொழில் கொள்கையின் முடிவுகள் (அல்லது உண்மையில் எந்தவொரு பொதுவான கொள்கையின்) விமர்சன ரீதியாக விரும்பிய முடிவை எவ்வளவு திறம்பட அரசு கண்காணிக்க முடியும் என்பதிலும், வளர்ந்து வரும் பெறுபேறுகளைக் கருத்திற்கொண்டு ஒதுக்கீடு மற்றும் உதவி விதிமுறைகளை மாற்றுவதிலும் தங்கியுள்ளது" [4]

யப்பான் மற்றும் கொரியாவில் கலந்துரையாடல் கவுன்சில்கள் அமைக்கப்பட்டன, அவை கைத்தொழிலில் இலக்குகளை நிர்ணயிக்கும். இலக்குகள் கடுமையானவை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிறரையும் ஈடுபடுத்தினர்.

செயல்திறன் கண்காணிக்கப்படுவதுடன் இலக்குகள் திருத்தப்படும். ஒரு கொள்கையானது பயனற்றதாகக் காணப்படும் போது அது திருத்தப்படும். கைத்தொழில் கொள்கை என்பது வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தோல்வியுற்றவர்களை வெளியேற்றுவதும் ஆகும்.

"கைத்தொழில் கொள்கையின் வெற்றியானது, பல்வேறு கொள்கை வழிமுறைகள் (தீர்வைகள், மானியங்கள், நுழைவுத் தடைகள்) மூலம் அது உருவாக்கும் வாடகைகளைப் பெறுபவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் எவ்வளவு விருப்பமும் திறமையும் கொண்டது என்பதில் தங்கியுள்ளது. கைத்தொழில் கொள்கையை நடத்துவதில் தவிர்க்க முடியாத சந்தை ஒழுக்கத்தை இடைநிறுத்துவது என்பது அரசாங்கம் ஒரு ஒழுக்கத்தை நிலைநாட்டுபவரின் பங்கை வகிக்க வேண்டும் என்பதே கருத்தாகும் ”[5].

கைத்தொழிற்துறைக்கான ஆதரவு குறித்து பக்கச்சார்பற்ற முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு அதிகாரத்துவம் தேவைப்படுகிறது - மேலும் செயல்திறனைப் பொறுத்து ஆதரவை மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ வேண்டும்.

"அரசாங்கம் அதன் பணயக்கைதியாக மாறாமல் தனியார் துறையுடன் எவ்வளவு நெருக்கமாக தொடர்பு கொள்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்." [6]

வெற்றிகரமான கைத்தொழில் கொள்கை என்பது கைத்தொழில் மற்றும் அரசிற்கிடையிலான ஒரு அதிநவீன கூட்டாண்மை என்பது தெளிவாகிறது, இது போட்டி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் நடப்பது கிழக்கு ஆசியாவைப் போலல்லாமல் இலத்தீன் அமெரிக்காவைப் போன்றதாகும்.

"குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் இறக்குமதி மாற்றுக் கொள்கைகளுக்கு ஒரு கெட்ட பெயர் கிடைத்தது, ஏனெனில் உருவாக்கப்பட்ட தொழில்கள் பெரும்பாலும் பாதுகாப்பின் விளைவாக மட்டுமே தப்பிப்பிழைத்தன. நாடுகள் இடைநிலை பொருட்களைப் பாதுகாப்பது மிகவும் விலை உயர்ந்ததாகும், ஏனென்றால் அது பொருட்களின் தரத்தைக் குறைத்து உற்பத்திச் சங்கிலியைக் குறைவாகப் போட்டிக்கு உட்படுத்தியது. இந்த வகையான பாதுகாப்புவாதத்திற்கு நாடுகள் பெரும்பாலும் அதிக விலை கொடுத்தன, மேலும் இந்த பாதுகாப்பைப் பராமரிப்பது பெரும்பாலும் ஊழலுடன் தொடர்புடையதாகும். ” [7]


[1] Chang, H. J, 2006. Industrial policy in East Asia – lessons for Europe. An industrial policy for Europe? From concepts to action EIB Papers, [Online]. Vol 2 No.6, 106-132. (Accessed 07 January 2019)

[2] Paul R. Krugman, 1983. Targeted Industrial Policies: Theory and Evidence. [Online] (Accessed 07 January 2019)

[3] Ibid

[4] M Khan, 2018. The Role of Industrial Policy:Lessons from Asia. [Online] (Accessed 07 January 2019)

[5] Ibid

[6] Ibid

[7] Joseph E. Stiglitz. Industrial Policy, Learning, and Development. [Online] (Accessed 07 January 2019)

அளவுக்கதிகமான வரிகள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
A Belly Full of Taxes

- டில்ஷானி ரணவக

புத்தாண்டு வாரம் முடிவடைந்து வருவதால், உங்கள் உணவுப் பட்டியலுக்கான மொத்தத் தொகையானது மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். பண்டிகை காலத்தை நீங்கள் இதற்குக் காரணம் காட்டியிருக்கலாம், மேலும் இலங்கையில் உணவு உண்மையில் மிகவும் விலை உயர்ந்ததாகும். இருப்பினும், இது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்களா? இவ்வளவு அத்தியாவசியமான ஒன்றுக்கு நாம் ஏன் இவ்வளவு பணம் செலுத்துகிறோம்?

உங்கள் குடும்பம் வாங்கும் ஒவ்வொரு உணவிற்கும், நீங்கள் இரண்டாவது உணவுக்கு (ஒரு தனிநபருக்காக) மீண்டும் அரசாங்கத்திற்கு விலை செலுத்துகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் குடும்பத்தின் அன்றாட நுகர்விற்காக  நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாதிருக்கலாம்! நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு  கொள்வனவுக்கும் செலுத்தும் மறைமுக வரி நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம்?

ஒரு குடும்பத்தில் நான்கு பேரின் சமநிலையான உணவுக்கான மளிகைப் பட்டியலைப் பார்ப்போம் (உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) பரிந்துரைத்த அளவுகள்).

Balanced+Meal+tax+figures.png

இந்த புள்ளிவிவரங்களை ஒருவர் ஆராயும்போது, ​​இந்த சிறிய கூடை மளிகைப் பொருட்களில் மட்டுமே நாங்கள் அரசாங்கத்திற்கு ரூபா 150 இற்குமதிகமான தொகையை வரி வடிவில் செலுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமானது. அது மதிய உணவுக்கு நீங்கள் வாங்கியிருக்கக்கூடிய ஒரு அரிசிப் பொதிக்குச் சமமானதாகும்!

இரண்டு முக்கிய காரணங்களுக்காக வரி விதிக்கப்படுகிறது; அவை அரசாங்க வருவாயின் முக்கிய ஆதாரமாக இருப்பதுடன் அவை உள்ளூர் உற்பத்தியாளர்களை இறக்குமதிப் போட்டியில் இருந்து பாதுகாக்க முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரசாங்க வருவாயில் 80% மறைமுக வரி மூலம் வசூலிக்கப்படுகிறது. வருமானத்திற்கு விதிக்கப்படும் வரிகளுக்கு மாறாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மறைமுக வரி விதிக்கப்படுகிறது.

உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்து பலப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்தையே நுகர்வுப் பொருட்களின் மீதான இத்தகைய கடுமையான வரிகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு வாதமாக முன்வைக்கின்றனர். ஒரு தீர்வையை விதிக்கும்போது, ​​இறக்குமதியின் விலை அதிகரித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் மலிவான மாற்றுப்பொருளாக இருக்கும் போட்டிக்கு எதிராக போட்டியிட வாய்ப்பளிக்கிறது. உதாரணமாக, ஒரு கிலோ பச்சை போஞ்சிக்கு நாட்டின் எல்லையில் 101% வரி விதிக்கப்படுகிறது (செலவு, காப்புறுதி மற்றும் சரக்கு (CIF) விலை). இதன் பொருள் நீங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பச்சை போஞ்சியை வாங்கினால், பொருளின் உண்மையான மதிப்பின் இரு மடங்கு விலையை நீங்கள் செலுத்த வேண்டும்.

இது உள்ளூர் தயாரிப்பாளர்களை ஈர்க்கிறது, ஏனெனில் அவர்கள் அதே நன்மைக்காக ஒப்பீட்டளவில் குறைந்த விலையை வழங்க முடியும். இந்தக் கொள்கைகள் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு உதவியாகக் காணப்பட்டாலும், அவை நிச்சயமாக நீண்ட காலத்திற்கு உதவாது.

நுகர்வோர் தோல்வியடைகின்றனர்

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மலிவான இறக்குமதியை எதிர்த்துப் போட்டியிட உதவும் வகையில் தீர்வைகள் விதிக்கப்படும் போது, ​​உள்ளூர் உற்பத்தியாளர்கள் திறமையாகவும், உற்பத்தித் திறனுடனும்  இருப்பதற்காக அனைத்து சந்தை சலுகைகளையும் அரசாங்கம் திறம்பட நீக்குகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான தீர்வைகள் அவற்றின் பிரதான போட்டி உள்நாட்டுப் பொருட்களை விட அதிக விலை கொண்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதன் விளைவாக, நீங்களும் நானும், உள்ளூர் நுகர்வோர் இரண்டு தடவை இழக்கிறோம். முதலாவதாக, நாங்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க விரும்பினால், உள்ளூர் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு உயர் தரமான, சிறந்த பொருளைக் கொடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. இரண்டாவதாக, நாங்கள் உள்ளூர் உற்பத்தியில் அதிருப்தியடைந்து, இறக்குமதி செய்யப்பட்ட மாற்றீட்டை வாங்க விரும்பினால், இந்தப் பொருள் அதிக தீர்வைகளுக்கு உட்படுத்தப்படுவதால் நாம் அதிக விலை கொடுக்க வேண்டும்.

இறக்குமதியின் அதிக விலை இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் இறுதி விலைக்கும் உள்ளூர் பொருளுக்கான விலைக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்குகிறது என்பதன் மூலம் நுகர்வோருக்கு இந்த இழப்பு அதிகரிக்கிறது. இந்த இடைவெளியை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இலாப விகிதமாக மாற்ற முடியும், ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட மாற்றீட்டில் விதிக்கப்பட்ட உயர் தீர்வையினளவுக்கு  தரத்தை மேம்படுத்தாமல் அவர்களின் பொருளின் விலையை அதிகரிக்க முடியும்.

நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமா?

ஊக்குவிப்புக்கள் இல்லாததால் எங்கள் உற்பத்தியாளர்கள் வினைத்திறனற்ற உற்பத்திக்கு பழக்கப்படுகிறார்கள். இந்த விடயத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களை அரசாங்கம் மேலும் பாதுகாக்க வேண்டுமா? அப்படியானால், வர்த்தக பரிமாற்றங்களை நாங்கள் கவனமாக பரிசீலிக்கிறோமா; நுகர்வோருக்கு ஏற்படும் செலவுகள் என்ன?

பாதுகாப்புவாதம் என்பது நாட்டில் சூடுபிடிக்கும் தலைப்பொன்றாகும். இலங்கை பொருளாதாரம் 1977 இல் திறக்கப்பட்டதிலிருந்து, உள்ளூர் தொழில்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பிரச்சாரங்கள் செயல்படுத்தப்பட்டன. பொருளாதாரத்தைத் திறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்காசிய பிராந்தியத்தில் அவ்வாறு செய்த முதல் நாடாகிய நாங்கள் இன்னும் பின்தங்கியுள்ளோம்.

மாறாக, மற்ற நாடுகளுடனான தொழில்நுட்ப முதலீடுகளில் தொடர்புபடலாம், அவை நாட்டில் குறைந்த விளைதிறன், குறைந்த செயல்திறன் கொண்ட, பாதுகாக்கப்பட்ட கைத்தொழில்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை பரிமாறிக்கொள்ள உதவும். இது வெளிநாட்டு முதலீட்டிற்காக பொருளாதாரத்தைத் திறத்தல், முதலீட்டாளர் நட்பு சூழலை உருவாக்குதல், அரசாங்கத்தால் பெரிதும் வரி விதிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்கைகளில் பெரும்பாலானவற்றை தளர்த்துதல்  ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்.

பாதுகாப்புவாதத்தின் இந்த நிருவாகமுறை தோல்வியுற்றதால், எங்கள் உற்பத்தியாளர்களை வெளிநாட்டுப் போட்டியில் இருந்து பாதுகாக்குமாறு நாங்கள் இன்னும் அரசாங்கத்திடம் கேட்கப்போகிறோமா?

உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.

Food security and self-sufficiency

- பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

உணவு வழங்கல் சங்கிலிகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் செயலிழக்கப்பட்டு அல்லது உடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில் உணவுப் பாதுகாப்பு குறித்து சிந்திப்பது சாதாரணமானதும் அவசியமானதுமாகும். ஆனால் புத்திசாலித்தனமாகவும், ஆதாரங்களால் அறிந்துகொண்ட வழிகளிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

எல்லா தரவரிசைகளும் குறிகாட்டிகளும் அவற்றின் அடிப்படையை உருவாக்கும் தரவுகளில் அல்லது அவற்றின் வடிவமைப்பில் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடலுக்கானதொரு பயனுள்ள தொடக்க புள்ளியை வழங்குகின்றன. உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறிகாட்டியானது  மலிவு, கிடைக்கும் தன்மை மற்றும் தரமும் பாதுகாப்பும் ஆகிய  மூன்று கூறுகளை உள்ளடக்கியதாகும். இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் குறித்த புதிய கூறு 2019 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.

உண்மையில், 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட மாநகர அரசாகிய சிங்கப்பூரில், விவசாய நிலங்களுக்கு அணுகல் இல்லை, எனவே உள்நாட்டில் வளர்க்கப்படும் உற்பத்திகள் அடிப்படைக் குறிகாட்டியில் முதலிடத்தில் உள்ளமையானது,  இந்த குறிகாட்டியானது பொது அறிவுக்கு அப்பாற்பட்ட உணவுப் பாதுகாப்புக்கான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இயற்கை வளங்கள் மற்றும் விரிதிறன் ஆகியவற்றைக் கணக்கிடும்போது சிங்கப்பூர் 11 இடங்களுக்குக் கீழே வருகின்றது. இது கடல் மட்ட உயர்வு, கடல் ஊட்டவளம் மிகுத்தல் மற்றும் உணவு இறக்குமதியில் தங்கியிருத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாகும். ஆனால் 11 ஆவது இடத்தில் கூட, இது தெற்காசிய நாடுகளை விட சிறப்பாக செயல்படுகிறது.

 நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பற்றி ஆய்வுசெய்து வருகிறேன். அனர்த்தக் கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான தொலைத்தொடர்பு வளங்களை வழங்குவதற்கான டெம்பியர் சமவாயத்திற்கு இலங்கை அணுகுதல் மற்றும் வை 2 கே பிரச்சினைக்குத் தயார்படுத்தல் ஆகியன உடனடி காரணங்களாகும். நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விவசாய விநியோகச் சங்கிலிகளை ஆய்வுசெய்து வருகிறோம்.

 மீண்டுவரும் தன்மை – செலவு என்பவற்றிற்கிடையிலான சமரசம்

மீண்டுவரும் தன்மை – செலவு என்பவற்றிற்கிடையில் எப்போதுமே ஒரு சமரசம் இருக்கும். செலவு பற்றிய எந்தவொரு அக்கறையும் இல்லாவிட்டால், 100% தேவையற்ற வசதிகளுடன் மேலும் ஆதரிக்கப்படும் அதிவிசேட மீண்டும்வரும் தன்மையை ஒருவர் கொண்டிருக்கலாம். சிலநேரங்களில் அக்கறைகள் மிகவும் அதிகமாகவும் சூழல் இடர்மிக்கதாகவும்  இருக்கும்போது ஒருவர் பல உதவிபெறுவார். உதாரணமாக, யுத்தத்தின் மிக மோசமான நாட்களில்,  எல்.ரீ.ரீ.ஈ கொழும்பைத் தாக்கியபோது இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பொறியியலாளர்கள் எதிர்பாராதவிதமாகத் திடீரென வேலைநிறுத்தம் செய்த போத, நடமாடும் அடிப்படையிலான நிலையங்களுக்கு பெற்றரி உதவி பெறுமாறு  என்னிடம் கூறப்பட்டது, அவை டீசல் மின்பிறப்பாக்கிகளால் மேலும் ஆதரிக்கப்பட்டன. ஆனால், இவையனைத்திற்கும்  பணம் செலவாகிறது.

உணவுப் பாதுகாப்பிலும் இதுவே உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கை நம்புவது இடரினைக் குறைக்கிறது என்று ஒருவர் நம்பலாம். ஆனால் உருளைக்கிழங்கின் உள்ளூர் உற்பத்தி செலவுகள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கை விட கணிசமாக அதிகமானது என்பது அனைவரும் அறிந்ததே. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கிற்கு விசேட வியாபாரப்பண்ட அறவீடுகளை விதிப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றார்கள். இதன் பொருள் என்னவென்றால், உள்நாட்டு நுகர்வோர் திறமையாக உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் உருளைக்கிழங்கிற்கு அதிக பணம் செலுத்துவதுடன் அவர்கள் உட்கொள்ளும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கிற்கு அரசாங்கத்திற்கு மறைமுக வரி செலுத்துகிறார்கள்.

தற்காப்புப் பொருளாதாரக் கொள்கைகள் அனைவருக்கும் உணவு விலையை அதிகப்படுத்துகின்றன. அதன் பெறுபேறாக,  உழைப்புச் செலவு அதிகமாக உள்ளது. எனவே, உலகளவில் போட்டியிட வேண்டிய பல கைத்தொழில்கள் அதிக உழைப்பு செலவுகளால் பாதிக்கப்படுகின்றன.

திறமையற்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் ஆதாரங்கள் ஆபத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயம் இயல்பாகவே இடர்மிக்கதாகும். வெள்ளம், வறட்சி, பூச்சிகள் மற்றும் நோய் பயிர்களை அழிக்கும். உண்மையிலேயே மீண்டுவரும் விநியோகச் சங்கிலிகள் ஒரு தனிப்பட்ட பிரதேசத்தை (உருளைக்கிழங்கிற்காக வெலிமடை போன்று) அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டைக் கூட நம்பியிருக்காது. உதாரணமாக வியட்நாம் என எடுத்துக் கொண்டால்  நாட்டிற்குத் தேவையான அரிசித் தேவைக்கு முற்றிலும் சார்ந்திருக்காமல்,  அரிசியில் தன்னிறைவு பெறுவதை ஒரு முழுமையான கொள்கை நோக்கமாக நினைப்பது நல்ல யோசனையாக இருக்காது.

கொவிட்-19 மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு முகங்கொடுத்து, வியட்நாம் அரிசி ஏற்றுமதியில் சில வரம்புகளை விதித்துள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களிடையே அக்கறைக்கு நியாயமான காரணத்தைத் தரும். ஆனால் மறுபுறம், உள்ளூர் உற்பத்தியை முழுமையாக நம்புவதும் ஆபத்தானது என்பது 2016-17இல் ஏற்பட்ட வறட்சியானது, 2015-16 ஆம் ஆண்டில் 2,903 மெட்ரிக் டொன்னாகவிருந்த அரிசி உற்பத்தியை 1,474 மெட்ரிக் டொன்னாகக் குறைத்தபோது விளங்கியது.  

 எனவே, உணவுப் பாதுகாப்பிற்கான உண்மையான பதில் தன்னிறைவுக்கான எளிமையான முயற்சி அல்ல, மாறாக பல்வேறு மூலங்களின் மூலம் செலவு மற்றும் இடர் நிர்வாகத்தை சமநிலைப்படுத்துதல் மற்றும் விநியோகச் சங்கிலிகள் வலுவானவை என்பதை உறுதிப்படுத்துதல் என்பனவாகும். இறுகும் புள்ளிகளைக் கட்டுப்படுத்தும் தனியுரிமையின்  தோற்றத்தைத் தடுப்பது பிரதிபலிப்பின் முக்கிய அங்கமாகும். இந்த சிக்கலான சமரசங்கள் மற்றும் சமப்படுத்தல்களைத்  தான் உலகளாவிய உணவு பாதுகாப்பு குறிகாட்டியானது, 34 வெவ்வேறு குறிகாட்டிகளின் நிறையிட்ட கலவையினூடாகச்  சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு - மதிப்பீடுசெய்யப்பட்டது

2019 ஆம் ஆண்டில் 113 நாடுகளில் இலங்கை 66 வது இடத்தைப் பிடித்தது. இது ஊட்டச்சத்துத் தராதரங்கள்,  சராசரி உணவு செலவில் மாற்றம், உலக வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்கள் தொகை விகிதம், உணவு பாதுகாப்பு, உணவு இழப்பு, நகர்ப்புற உறிஞ்சுதல் திறன், விவசாய உற்பத்தியின் ஏற்ற இறக்கம், மற்றும் விவசாயிகளுக்கு நிதியளிப்பதற்கான அணுகல்  போன்றவற்றில் அதிக மதிப்பெண் பெற்றது. விவசாய ஆய்வு மற்றும் அபிவிருத்தி மீதான பொதுச் செலவு, கொள்வனவு இயல்திறனை அடிப்படையாகக் கொண்ட தலா மொத்தத் தேசிய உற்பத்தி, புரதத் தரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை (2018 மற்றும் 2019 க்கு இடையில் மிகப்பெரிய சரிவு) ஆகியவற்றின் அடிப்படையில் அதன் மதிப்பெண் குறைக்கப்பட்டது.

இலங்கையின் ஒட்டுமொத்த மதிப்பெண் சராசரியை விட சற்று குறைவாக இருந்ததுடன் தரம் மற்றும் பாதுகாப்பில் சற்று குறைவாக இருந்தது. இது தெற்காசியாவில் அதன் சகாக்களை விட முன்னால் இருந்தது, ஆனால், இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் போன்ற சக நாடுகளுக்குப் பின்னால் இருந்தது. இந்தியா 72 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் (78 வது இடம்) மற்றும் நேபாளம் (79 வது) என அதனைவிடக் குறைவாக உள்ளன. வழக்கம் போல், இலங்கை மிகவும் மோசமாக இல்லை, ஆனால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 

இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் ஆகியன கலவையில் சேர்க்கப்படும்போது, ​​இலங்கை 113 இல் 67 வது இடத்தினுள் வருகின்றது. சில நாடுகளில் மீண்டுவருதல் தொடர்பான காரணிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பரந்த ஊசலாட்டத்தைக் காட்டுகின்றன. அடிப்படைக் குறிகாட்டியில் 12 வது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா, இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் காரணிகளாக இருக்கும்போது 16 வது இடத்திற்கு வீழ்ச்சியடைகிறது, அதே நேரத்தில் நியூசிலாந்து அவுஸ்திரேலியாவைவிட  ஐந்து ஸ்தானங்கள் முந்திக்கொண்டு 14வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது.

செலவுக்கு உணர்திறன் கொண்ட மீண்டுவரும் தன்மை

கொவிட்-19 இற்கான பிரதிபலிப்பும், அதன் விளைவாக உணவு வழங்கல் சங்கிலிகளால் ஏற்பட்ட சேதமும் முழு விவசாய முறையையும் முழுமையான மீளாய்வுக்கு அழைப்பு விடுக்கின்றது. தற்போதைய அமைப்பின் பலவீனம் வெறுமனே விடப்பட்டுள்ளது. ஆனால் பிரதிபலிப்பானது நுணுக்கமாக இருப்பதுடன் ஆதாரங்களை நிதானமாக கருத்தில் கொண்டும், உணவில் பணத்திற்கான  மதிப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டும்  வழங்கப்பட வேண்டும். திறனற்ற உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக இறக்குமதியைத் தடைசெய்வதற்கும் நுகர்வோர் மீது வரி விதிப்பதற்கும் பதிலாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பன்முகப்படுத்தப்பட்டிருப்பதால் விநியோகச் சங்கிலிகள் நெகிழக்கூடியவை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விநியோகச் சங்கிலிகளில் இணைப்புகளின் தனியுரிமையைத் தடுப்பதே இதைச் செய்வதற்கான சிறந்த வழியாகும்.

தன்னிறைவு போன்ற சுலோகங்களுக்கு எளிமையான பின்வாங்கல் போதுமானதாக இருக்காது. 1970 களில் இருந்தே அந்தக் கொள்கைகளில் இலங்கைக்கு அனுபவம் உள்ளது. பின்னர் அவை  வசதிபடைத்தவர்களுக்கு கறுப்புச் சந்தையும் ஏழைகளுக்கு  ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் வழிவகுத்தன. மிகவும் எளிமையான நேரத்தில் செயல்படுத்தப்பட்ட அவற்றை பலசரக்குக் கடைகளால் நுகர்வோர் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாத சிக்கலான இன்றைய பொருளாதார நிலையில்  செயற்படுத்த முடியாதுள்ளது.