கொவிட் -19 இன் பொருளாதாரத் தாக்கங்கள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ”Economic implications of COVID-19

கொவிட்-19 இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தாக்கங்களில் வேலை நாட்களின் எண்ணிக்கையை நேரடியாகக் குறைத்தல் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சமூக இடைவெளி, நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாளுவற்கான மருத்துவ செலவுகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் தேவையான சமூக இடைவெளி  தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தயாராக இல்லாதவர்களுக்கு ஏற்படக் கூடிய பாரிய தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான செலவுகள் ஆகியன உள்ளடங்கும். 

வருமானத்தில் உடனடி விளைவு இருக்கும் என்றாலும், வைரஸ் பரவுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் கொள்கைகளிலிருந்து நடுத்தர மற்றும் நீண்ட கால விளைவுகள் ஏற்படும். நோய்த்தொற்றுகளின் வீதத்தைப் பொருத்தவரை, இதுவரை நாங்கள் சிறப்பாகச் செய்துள்ளோம். பிரச்சினை என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்தி நோய்தடுப்புப் பொறிமுறையை நம்மால் பராமரிக்க முடியுமா  என்பதாகும். 

பொருளாதாரத்திற்கான இந்த அதிர்ச்சியானது நாம் சந்தித்த (2008-2012) உலகளாவிய நிதி நெருக்கடியைவிட பெரியதும் மற்றும் ஆழமானதுமாகும். எமது முக்கிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களில் குறைவுகளை சந்தித்தமை காரணமாக அந்த நெருக்கடியின் வரையறுக்கப்பட்ட விளைவு காணப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு எமது சுற்றுலாத் துறையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் கொவிட்-19 தாக்கியபோது அதிலிருந்து நாங்கள் முழுமையாக மீளவில்லை. ஆனால் விளைவானது  ஒப்பீட்டளவில் சிறியதாகும் ஒரு துறைக்கு வரையறுக்கப்பட்டதாகவும் இருந்தது.

ஆரம்ப நிலைமைகள்

கொவிட்-19 தாக்கியபோது நாங்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தோம். 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2.6% ஆக இருந்தது, கொவிட் -19 இன் தாக்கத்துடன் கணிசமான சீர்திருத்தங்கள் மற்றும் பெரிய உட்பாய்ச்சல்கள் இல்லாமல், குறிப்பாக நேரடி வெளிநாட்டு முதலீடு இன்றி, எமது சராசரி வளர்ச்சி விகிதத்தை மீட்டெடுப்பதனை (மூன்று தசாப்தங்களுக்கு 4% சராசரி) எதிர்வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அடைவதற்குக் கடினமாக இருக்கும்.

2018 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பிறகு சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமாகக் குறைவடைந்தது. சுற்றுலாத்துறையின் உடனடி எதிர்காலம் நன்றாகத் தெரியவில்லை. எங்கள் ஏற்றுமதிகள் நடப்புக் கணக்கில் பணம் செலுத்தும் அளவுக்கு உதவுவதற்குப் போதுமான அளவில் அதிகரிக்கவில்லை. இதற்கிடையில், கடன் வாங்கிய நிதியின் ஒரு பகுதி உட்பட நமது அந்நிய செலாவணி ஒதுக்கமானது சுமார் 7.0 பில்லியன் டொலராக குறைவானதாகவே உள்ளது. இறுதியாக, எதிர்வரும் 2020-2023 ஆகிய நான்கு ஆண்டுகளில் 16 .0 பில்லியன் டொலர் பெறுமதியுயான பாரிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

கொவிட் -19 இன் பொருளாதாரத் தாக்கம்

வைரஸ் பரவலின் கணிசமான பொருளாதார தாக்கத்தை நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்பார்க்கலாம், பிந்தையது முந்தையதை விட முக்கியமானது. வழங்கப்பட்ட நேரடி தாக்கம் என்னவென்றால், இன்றுவரை ஊழியப்படையானது மெய்நிகர் தனிமைப்படுத்தலில் உள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இதற்கு முன்னர் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத நிதிகள் செலவு செய்யப்படும். மேலும், நிவாரண நடவடிக்கைகளுக்கு அதிக செலவு ஏற்படும்.

சிறப்பு நிதி ஒதுக்கீடு காணப்பட வேண்டும். மற்ற நாடுகளின் அனுபவத்தைப் பார்த்தால் இந்த நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும், ஆனால் சரியான நெறிமுறைகளைப் பின்பற்றினால் குறிப்பாக சமூக இடைவெளி மூலம் நமது நோய்த்தொற்றுகள் குறைவாகவே இருக்கும். நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ சேவைகளுக்கான அணுகலை வழங்க சரியான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றின் தாக்கத்தை நாம் குறைக்க முடியும். அதிக பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் பயிற்சி பெற்ற தொற்றுநோயியல் நிபுணர்களை நம்புவது உதவும்.

பொருளாதாரத்தில் வைரஸின் நேரடித் தாக்கமானது, அனைத்து துறைகளிலும் உற்பத்தி கிட்டத்தட்ட ஒரு முழு நிறுத்தத்திற்கு வந்துள்ளமையால்  வெளியீடு குறைந்துள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில் மட்டுமே அதிகரிக்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவிருப்பதுடன்  அவர்கள் இன்னும் தங்கள் வீடுகளிலே உள்ளனர்.

தேசிய வருமானத்தைப் பொறுத்தவரை - ஊதியங்கள், இலாபங்கள் மற்றும் வட்டி வருமானங்கள் அண்மைக் காலத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். இது மீட்டெடுப்பதற்கு மிகவும் தேவையான கொள்கைகளை உருவாக்குகிறது. அவசரகாலத்தை நாங்கள் சமாளிக்கும் அதே வேளை, முறையான கொள்கைகளுக்கு நாம் அண்மைய எதிர்காலத்திற்கு அப்பால் சிந்திக்க வேண்டும். இந்த அவசர நிலைமைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கொவிட் -19 தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிகழ்ச்சிகள்

நிவாரண நடவடிக்கைகளின் முழு பட்டியலையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில் பின்வருவன உள்ளடங்கும்:

  • வருமான வரி செலுத்துவதற்கான தயவுக்காலங்கள். மற்றும் சேர்பெறுமதி வரி, வாகன அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல், தண்ணீர்க் கட்டணங்களை செலுத்துதல் மற்றும் ரூ. 15,000 இற்குக் குறைந்த  ஆதன வரிகளைச் செலுத்துதல், 50,000 க்கும் குறைவான மாதாந்த  கனட்டைப் பட்டியல்களைச் செலுத்துவதற்கு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிப்பு வழங்குதல்.

  • முச்சக்கர வண்டிகளின் குத்தகை கடன் கொடுப்பனவுகளை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துதல்.

  • மே 30 வரை அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களிடமிருந்து கடன் தொகையை மீளஅறவிடாமை.

  • ரூபா. 1 மில்லியனுக்கும் குறைவான தனிநபர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துதல்.

  • பயிற்சியைப் பின்பற்றுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ரூபா. 20,000 கொடுப்பனவு வழங்கப்படுதல்.

  • நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான அக்ரஹாரா காப்புறுதிச் சலுகைகளை இரட்டிப்பாக்குதல்.

  • சுற்றுலா மற்றும் தைத்த ஆடைத் துறைகளைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு (SME) ஆறு மாத கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு காலம் தாழ்த்துதலை வழங்குதல்.

  • பணச் சந்தையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன கூட்டாக திறைசேரிப் பிணையங்கள் மற்றும் பத்திரங்களில் 7% வட்டி வீதத்தில் முதலீடு செய்தல்

இந்த நடவடிக்கைகள் எதுவும் விலை முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவை வழிகாட்டல்கள், கட்டளைகள் மற்றும் தொகைரீதியான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

நிவாரணம் வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளில் பின்வருன  அடங்குகின்றன

  • கடனட்டைகளில் உள்நாட்டு கொடுக்கல்வாங்கல்களில் அதிகபட்சம் 15% வட்டி விகிதம் ரூ. 50,000 வரை மற்றும் குறைந்தபட்ச மாதாந்த கட்டணங்களில் 50% குறைப்பு.

  • அனைத்து வங்கி கிளைகளும் ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரங்களில் திறந்திருத்தல்.

  • துறைமுகங்கள், சுங்கம் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள் அத்தியாவசிய உணவு, உரம், மருந்துகள் மற்றும் எரிபொருளை தொடர்ந்து தொடர்புடைய நபர்களுக்கு வழங்குதல்.

  • சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் சமுர்த்தி அட்டை வைத்திருபவர்களுக்கு வட்டி இல்லாத முற்பணம்  அல்லது 10,000 ரூபாவை  சமுர்த்தி வங்கிகள் மூலம் வழங்குதல்.

  • சமுர்த்தி அதிகாரசபையானது உடனடியாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சத்துணவுப் பொருட்களுக்கான உரித்துச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

  • சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு சேர்பெறுமதி வரி மற்றும் பிற வரிகளிலிருந்து விலக்களித்தல்.

  • உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இலங்கை வங்கியில் இல் ஒரு சிறப்பு கணக்கு திறக்கப்பட்டது. ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் அரிசி, பருப்பு மற்றும் உப்பு வழங்கப்படுதல். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்த நிதியில் பங்களிப்பதற்காக வரி மற்றும் அந்நிய செலாவணிக் கட்டுப்பாடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இருந்தபோதிலும், ஏழைகளுக்கும் குறிப்பாக வேலையற்றோர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருளாதார நிவாரணம் வழங்குவது கடினம். சமுர்த்தி சரியாக இலக்கு வைக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். உதவி பெறத் தகுதியான சிலருக்கு இந்த வருமான இடமாற்றங்களுக்கு அணுகல் இல்லை, அதிக வருமானம் உள்ள ஏனையோர் சமுர்த்தி நிதியைப் பெறுகிறார்கள். தகுதியான ஏழைகளுக்கு உதவ எமது எதிர்கால திட்டங்களில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

சிலி போன்ற பிற நாடுகளில் விரிவான குடும்ப மற்றும் வருமான தரவுகளின் அடிப்படையில் வருமான பரிமாற்ற முறை உள்ளது. சமுர்த்தி பெறாதவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு பங்கீட்டு அட்டைகளை வழங்குவதற்கு எமது அரசாங்கம் எடுத்திய சமீபத்திய முயற்சி உதவியாக இருக்கும். ஆனால் நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு, நாம் சமுர்த்தி திட்டத்தை சீர்திருத்தி தகுதியானவர்களுக்கு நன்மைகளை வழங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியானது கடன் கட்டுப்பாடுகள் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது, இது பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் நீண்ட கால சிதைவுகளை உருவாக்கி அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தக் கொள்கைகள் மூலம், போட்டி பரிமாற்ற வீதம் உட்பட பொருளாதாரத்தை நிர்வகிக்க விலைகளைப் பயன்படுத்துவதை விட தொகைரீதியான நடவடிக்கைகளில் அதிக நம்பகத்தன்மையை இது குறிக்கிறது. விலை முறை பயன்படுத்தப்படாதபோது, ​​பகுத்தறிவற்ற ஒதுக்கீடு மற்றும் ஊழலை வளர்க்கும் ஒரு அதிகாரம் அல்லது “ஸார்” மூலமாக அளவுகளை ஒதுக்க வேண்டி ஏற்படும்.

முடிவுகள்

கொவிட்-19 ஆல் உருவாக்கப்பட்ட குறுகிய கால சூழ்நிலையை, குறிப்பாக நுகர்வு தரப்பில் தீர்வு காண ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் பொருத்தமானவையாகும். ஆனால் தனியார் மருந்தகங்களை மூடுவது போன்ற முழுமையான பணிநிறுத்தங்கள் நீரிழிவு, நாள்பட்ட இதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற தினசரி மருந்துகள் தேவைப்படுபவர்களின் சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பதற்கு எதிர்மறையானவை. தனியார் மருந்தகங்களை திறக்க அனுமதிப்பது போன்று கட்டுப்பாட்டை தளர்த்துவது சாத்தியமானது என்று கண்டறியப்பட்டது.

இருப்பினும், நாங்கள் ஏற்கனவே பலவீனமான ஆரம்ப நிலைமைகளிலிருந்து தொடங்குவதால், இந்தப் பணி எளிதானதல்ல. மேலும், இது பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கை விரிவாக்குவதற்கும் அதிகாரத்தை அதிகம் பயன்படுத்துவதற்கான ஆபத்தைக் கொண்டுள்ளது. சில நேரங்களில், அதை குறைத்துப் பயன்படுத்துவது, வருமான இடமாற்றங்கள் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை செயல்படுத்துவது பொது சேவையை பெரிதும் சார்ந்துள்ளது. இது திறமையாகவும் விரைவாகவும் செயல்படுவதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் கையை மிகைப்படுத்தி அரசாங்கத்திற்கு கூடுதல் மற்றும் நிரந்தர அதிகாரத்தை வழங்குவதற்கான ஆபத்தை கொண்டுள்ளது. அந்த சோதனையின் முடிவுகளை 1970-1977 காலகட்டத்தில், வருமான உச்சவரம்புகளுடன், நெல் போக்குவரத்து மீது 100% இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் நாம் கண்ணுற்றோம். அரசாங்கத்தின் அதிகமாகத் தலையீடு செய்தமை அந்த காலகட்டத்தில் பேரழிவு தரும் முடிவுகளுக்கு வழிவகுத்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்தது, வேலைவாய்ப்பைப் போலவே வாழ்க்கைத் தரத்திலும் அபரிதமான வீழ்ச்சி ஏற்பட்டது.

இலங்கை மத்திய வங்கியானது கடன் அளவில் செல்வாக்குச் செலுத்துவதற்கு நேரடி தொகையியல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது நல்லது. இது கொவிட்-19 அதிர்ச்சியைக் கையாள்வதற்கான பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கும் மற்றும் ஒதுக்கங்களை  முகாமை செய்வது  உள்ளிட்ட தொகைரீதியான நடவடிக்கைகளுக்கான அதன் விருப்பத்தை குறிப்பாக நெகிழ்வான மற்றும் போட்டி பரிமாற்ற வீதங்களைத் தவிர்த்தல்.

நேரடி நடவடிக்கைகள் போட்டி இல்லாத பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும், குறிப்பாக நமது ஏற்றுமதி வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். இறக்குமதியை நேரடியாக தடை செய்வது ஏற்றுமதிக்கு எதிரான ஒரு சார்பை உருவாக்கும். பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களில் நாம் தங்கியிருக்க வேண்டும். குறுகிய காலத்தில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது அவசியமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சியை உறுதிப்படுத்த இது போதாது.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை எட்வகாடோ நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.