உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.

Food security and self-sufficiency

- பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

உணவு வழங்கல் சங்கிலிகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் செயலிழக்கப்பட்டு அல்லது உடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில் உணவுப் பாதுகாப்பு குறித்து சிந்திப்பது சாதாரணமானதும் அவசியமானதுமாகும். ஆனால் புத்திசாலித்தனமாகவும், ஆதாரங்களால் அறிந்துகொண்ட வழிகளிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

எல்லா தரவரிசைகளும் குறிகாட்டிகளும் அவற்றின் அடிப்படையை உருவாக்கும் தரவுகளில் அல்லது அவற்றின் வடிவமைப்பில் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடலுக்கானதொரு பயனுள்ள தொடக்க புள்ளியை வழங்குகின்றன. உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறிகாட்டியானது  மலிவு, கிடைக்கும் தன்மை மற்றும் தரமும் பாதுகாப்பும் ஆகிய  மூன்று கூறுகளை உள்ளடக்கியதாகும். இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் குறித்த புதிய கூறு 2019 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.

உண்மையில், 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட மாநகர அரசாகிய சிங்கப்பூரில், விவசாய நிலங்களுக்கு அணுகல் இல்லை, எனவே உள்நாட்டில் வளர்க்கப்படும் உற்பத்திகள் அடிப்படைக் குறிகாட்டியில் முதலிடத்தில் உள்ளமையானது,  இந்த குறிகாட்டியானது பொது அறிவுக்கு அப்பாற்பட்ட உணவுப் பாதுகாப்புக்கான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இயற்கை வளங்கள் மற்றும் விரிதிறன் ஆகியவற்றைக் கணக்கிடும்போது சிங்கப்பூர் 11 இடங்களுக்குக் கீழே வருகின்றது. இது கடல் மட்ட உயர்வு, கடல் ஊட்டவளம் மிகுத்தல் மற்றும் உணவு இறக்குமதியில் தங்கியிருத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாகும். ஆனால் 11 ஆவது இடத்தில் கூட, இது தெற்காசிய நாடுகளை விட சிறப்பாக செயல்படுகிறது.

 நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பற்றி ஆய்வுசெய்து வருகிறேன். அனர்த்தக் கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான தொலைத்தொடர்பு வளங்களை வழங்குவதற்கான டெம்பியர் சமவாயத்திற்கு இலங்கை அணுகுதல் மற்றும் வை 2 கே பிரச்சினைக்குத் தயார்படுத்தல் ஆகியன உடனடி காரணங்களாகும். நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விவசாய விநியோகச் சங்கிலிகளை ஆய்வுசெய்து வருகிறோம்.

 மீண்டுவரும் தன்மை – செலவு என்பவற்றிற்கிடையிலான சமரசம்

மீண்டுவரும் தன்மை – செலவு என்பவற்றிற்கிடையில் எப்போதுமே ஒரு சமரசம் இருக்கும். செலவு பற்றிய எந்தவொரு அக்கறையும் இல்லாவிட்டால், 100% தேவையற்ற வசதிகளுடன் மேலும் ஆதரிக்கப்படும் அதிவிசேட மீண்டும்வரும் தன்மையை ஒருவர் கொண்டிருக்கலாம். சிலநேரங்களில் அக்கறைகள் மிகவும் அதிகமாகவும் சூழல் இடர்மிக்கதாகவும்  இருக்கும்போது ஒருவர் பல உதவிபெறுவார். உதாரணமாக, யுத்தத்தின் மிக மோசமான நாட்களில்,  எல்.ரீ.ரீ.ஈ கொழும்பைத் தாக்கியபோது இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பொறியியலாளர்கள் எதிர்பாராதவிதமாகத் திடீரென வேலைநிறுத்தம் செய்த போத, நடமாடும் அடிப்படையிலான நிலையங்களுக்கு பெற்றரி உதவி பெறுமாறு  என்னிடம் கூறப்பட்டது, அவை டீசல் மின்பிறப்பாக்கிகளால் மேலும் ஆதரிக்கப்பட்டன. ஆனால், இவையனைத்திற்கும்  பணம் செலவாகிறது.

உணவுப் பாதுகாப்பிலும் இதுவே உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கை நம்புவது இடரினைக் குறைக்கிறது என்று ஒருவர் நம்பலாம். ஆனால் உருளைக்கிழங்கின் உள்ளூர் உற்பத்தி செலவுகள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கை விட கணிசமாக அதிகமானது என்பது அனைவரும் அறிந்ததே. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கிற்கு விசேட வியாபாரப்பண்ட அறவீடுகளை விதிப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றார்கள். இதன் பொருள் என்னவென்றால், உள்நாட்டு நுகர்வோர் திறமையாக உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் உருளைக்கிழங்கிற்கு அதிக பணம் செலுத்துவதுடன் அவர்கள் உட்கொள்ளும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கிற்கு அரசாங்கத்திற்கு மறைமுக வரி செலுத்துகிறார்கள்.

தற்காப்புப் பொருளாதாரக் கொள்கைகள் அனைவருக்கும் உணவு விலையை அதிகப்படுத்துகின்றன. அதன் பெறுபேறாக,  உழைப்புச் செலவு அதிகமாக உள்ளது. எனவே, உலகளவில் போட்டியிட வேண்டிய பல கைத்தொழில்கள் அதிக உழைப்பு செலவுகளால் பாதிக்கப்படுகின்றன.

திறமையற்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் ஆதாரங்கள் ஆபத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயம் இயல்பாகவே இடர்மிக்கதாகும். வெள்ளம், வறட்சி, பூச்சிகள் மற்றும் நோய் பயிர்களை அழிக்கும். உண்மையிலேயே மீண்டுவரும் விநியோகச் சங்கிலிகள் ஒரு தனிப்பட்ட பிரதேசத்தை (உருளைக்கிழங்கிற்காக வெலிமடை போன்று) அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டைக் கூட நம்பியிருக்காது. உதாரணமாக வியட்நாம் என எடுத்துக் கொண்டால்  நாட்டிற்குத் தேவையான அரிசித் தேவைக்கு முற்றிலும் சார்ந்திருக்காமல்,  அரிசியில் தன்னிறைவு பெறுவதை ஒரு முழுமையான கொள்கை நோக்கமாக நினைப்பது நல்ல யோசனையாக இருக்காது.

கொவிட்-19 மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு முகங்கொடுத்து, வியட்நாம் அரிசி ஏற்றுமதியில் சில வரம்புகளை விதித்துள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களிடையே அக்கறைக்கு நியாயமான காரணத்தைத் தரும். ஆனால் மறுபுறம், உள்ளூர் உற்பத்தியை முழுமையாக நம்புவதும் ஆபத்தானது என்பது 2016-17இல் ஏற்பட்ட வறட்சியானது, 2015-16 ஆம் ஆண்டில் 2,903 மெட்ரிக் டொன்னாகவிருந்த அரிசி உற்பத்தியை 1,474 மெட்ரிக் டொன்னாகக் குறைத்தபோது விளங்கியது.  

 எனவே, உணவுப் பாதுகாப்பிற்கான உண்மையான பதில் தன்னிறைவுக்கான எளிமையான முயற்சி அல்ல, மாறாக பல்வேறு மூலங்களின் மூலம் செலவு மற்றும் இடர் நிர்வாகத்தை சமநிலைப்படுத்துதல் மற்றும் விநியோகச் சங்கிலிகள் வலுவானவை என்பதை உறுதிப்படுத்துதல் என்பனவாகும். இறுகும் புள்ளிகளைக் கட்டுப்படுத்தும் தனியுரிமையின்  தோற்றத்தைத் தடுப்பது பிரதிபலிப்பின் முக்கிய அங்கமாகும். இந்த சிக்கலான சமரசங்கள் மற்றும் சமப்படுத்தல்களைத்  தான் உலகளாவிய உணவு பாதுகாப்பு குறிகாட்டியானது, 34 வெவ்வேறு குறிகாட்டிகளின் நிறையிட்ட கலவையினூடாகச்  சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு - மதிப்பீடுசெய்யப்பட்டது

2019 ஆம் ஆண்டில் 113 நாடுகளில் இலங்கை 66 வது இடத்தைப் பிடித்தது. இது ஊட்டச்சத்துத் தராதரங்கள்,  சராசரி உணவு செலவில் மாற்றம், உலக வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்கள் தொகை விகிதம், உணவு பாதுகாப்பு, உணவு இழப்பு, நகர்ப்புற உறிஞ்சுதல் திறன், விவசாய உற்பத்தியின் ஏற்ற இறக்கம், மற்றும் விவசாயிகளுக்கு நிதியளிப்பதற்கான அணுகல்  போன்றவற்றில் அதிக மதிப்பெண் பெற்றது. விவசாய ஆய்வு மற்றும் அபிவிருத்தி மீதான பொதுச் செலவு, கொள்வனவு இயல்திறனை அடிப்படையாகக் கொண்ட தலா மொத்தத் தேசிய உற்பத்தி, புரதத் தரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை (2018 மற்றும் 2019 க்கு இடையில் மிகப்பெரிய சரிவு) ஆகியவற்றின் அடிப்படையில் அதன் மதிப்பெண் குறைக்கப்பட்டது.

இலங்கையின் ஒட்டுமொத்த மதிப்பெண் சராசரியை விட சற்று குறைவாக இருந்ததுடன் தரம் மற்றும் பாதுகாப்பில் சற்று குறைவாக இருந்தது. இது தெற்காசியாவில் அதன் சகாக்களை விட முன்னால் இருந்தது, ஆனால், இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் போன்ற சக நாடுகளுக்குப் பின்னால் இருந்தது. இந்தியா 72 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் (78 வது இடம்) மற்றும் நேபாளம் (79 வது) என அதனைவிடக் குறைவாக உள்ளன. வழக்கம் போல், இலங்கை மிகவும் மோசமாக இல்லை, ஆனால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 

இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் ஆகியன கலவையில் சேர்க்கப்படும்போது, ​​இலங்கை 113 இல் 67 வது இடத்தினுள் வருகின்றது. சில நாடுகளில் மீண்டுவருதல் தொடர்பான காரணிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பரந்த ஊசலாட்டத்தைக் காட்டுகின்றன. அடிப்படைக் குறிகாட்டியில் 12 வது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா, இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் காரணிகளாக இருக்கும்போது 16 வது இடத்திற்கு வீழ்ச்சியடைகிறது, அதே நேரத்தில் நியூசிலாந்து அவுஸ்திரேலியாவைவிட  ஐந்து ஸ்தானங்கள் முந்திக்கொண்டு 14வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது.

செலவுக்கு உணர்திறன் கொண்ட மீண்டுவரும் தன்மை

கொவிட்-19 இற்கான பிரதிபலிப்பும், அதன் விளைவாக உணவு வழங்கல் சங்கிலிகளால் ஏற்பட்ட சேதமும் முழு விவசாய முறையையும் முழுமையான மீளாய்வுக்கு அழைப்பு விடுக்கின்றது. தற்போதைய அமைப்பின் பலவீனம் வெறுமனே விடப்பட்டுள்ளது. ஆனால் பிரதிபலிப்பானது நுணுக்கமாக இருப்பதுடன் ஆதாரங்களை நிதானமாக கருத்தில் கொண்டும், உணவில் பணத்திற்கான  மதிப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டும்  வழங்கப்பட வேண்டும். திறனற்ற உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக இறக்குமதியைத் தடைசெய்வதற்கும் நுகர்வோர் மீது வரி விதிப்பதற்கும் பதிலாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பன்முகப்படுத்தப்பட்டிருப்பதால் விநியோகச் சங்கிலிகள் நெகிழக்கூடியவை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விநியோகச் சங்கிலிகளில் இணைப்புகளின் தனியுரிமையைத் தடுப்பதே இதைச் செய்வதற்கான சிறந்த வழியாகும்.

தன்னிறைவு போன்ற சுலோகங்களுக்கு எளிமையான பின்வாங்கல் போதுமானதாக இருக்காது. 1970 களில் இருந்தே அந்தக் கொள்கைகளில் இலங்கைக்கு அனுபவம் உள்ளது. பின்னர் அவை  வசதிபடைத்தவர்களுக்கு கறுப்புச் சந்தையும் ஏழைகளுக்கு  ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் வழிவகுத்தன. மிகவும் எளிமையான நேரத்தில் செயல்படுத்தப்பட்ட அவற்றை பலசரக்குக் கடைகளால் நுகர்வோர் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாத சிக்கலான இன்றைய பொருளாதார நிலையில்  செயற்படுத்த முடியாதுள்ளது.